இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, June 04, 2013

மாவட்ட கல்விப்பிரிவுகளில் தலைமை பணியிடங்கள் காலி

   கல்வித் துறையில், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் என, தலைமை பணியிடங்கள் பல, காலியாக கிடப்பதால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள் வரை காலியாக இருந்தது. இந்த நிலையில், சிவகங்கை, விருதுநகர், நெல்லை உட்பட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களும் (எஸ்.எஸ்.ஏ., திட்டம்) கடந்த வாரம் ஓய்வு பெற்றனர். மதுரை மாவட்ட மெட்ரிக் ஆய்வாளர் உட்பட, 17 கல்வி அதிகாரிகள், இரு தினங்களுக்கு முன் ஓய்வு பெற்றனர்.

இதனால், 35 முதன்மை கல்வி அலுவலர்கள், 15 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள், காலியாக உள்ளன. தவிர, 6 இணை இயக்குனர்கள் பணியிடங்களும், நூலகம் உட்பட 3 இயக்குனர் பணியிடங்களும் காலியாக உள்ளன. தலைமையிட பணியிடங்கள், காலியாக உள்ளதால், உத்தரவுகளை செயல்படுத்துவதில், தேக்கம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

கல்வித் துறையில், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் மிக முக்கியமானவை. உத்தரவுகளை, செயலாக்கம் செய்வதில் இவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. தற்போது, 14 வகை அரசு நலத்திட்டங்கள், மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், வழிநடத்தும் அதிகாரிகள் இல்லாததால், இப்பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. ஒரு மாவட்ட அதிகாரி ஓய்வு பெறும் போது, உடனே அந்த பணியிடத்தை நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, நிர்வாகி கூறினர்.

No comments:

Post a Comment