இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, February 29, 2020

ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை பெற்றால் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டு முன்னுரிமை பட்டியலில் இடம் இல்லை: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு


 ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அந்த ஆசிரியர்களை 5 ஆண்டு காலத்திற்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கூடாது என்று தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் தொடக்க கல்வி, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு பள்ளி ஆசிரியர்கள் 1.1.2020 நிலவரப்படி பதவி உயர்வுக்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கி தமிழக தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுதொடர்பான உத்தரவில் கூறியிருப்பதாவது: அனைத்து வகை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் வட்டார கல்வி அலுவலரால் தயாரிக்கப்பட்டு அந்தந்த கல்வி மாவட்ட அளவில் இரண்டு ஒன்றியங்களுக்கு ஒரு வட்டார கல்வி அலுவலர், ஒரு கண்காணிப்பாளர் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோர் கொண்ட குழு அமைத்து கல்வி மாவட்ட தலைமை இடத்தில் முகாம் அமைத்து சரிபார்த்து மாவட்ட கல்வி அலுவலரால் ஒப்பளிக்க வேண்டும். 

அதனை வட்டார கல்வி அலுவலர் அறிவிப்பு பலகையில் வெளியிட்டு அனைத்து ஆசிரியர்களிடமும் ஒப்புகை பெற வேண்டும். தமிழ்நாடு குடிமுறைப்பணி ஒழுங்குமுறையும் மேல்முறையீடும் விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்தால் முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கூடாது.  ஒழுங்கு நடவடிக்கையில் கண்டனம் தண்டனை தவிர்த்து பிற தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தால் 5 ஆண்டு காலத்திற்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்கக் கூடாது. அனைத்து வகை ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்யும்போது பதவி உயர்வுக்கு தேவையான கல்வித்தகுதி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி ஆகியவை உரிய காலக்கெடுவிற்குள் பெற்றுள்ளார்களா என்பதை உறுதி செய்துகொண்டு பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, February 26, 2020

புத்துணர்வுடன் செயல்பட வகுப்பறையில் 5 நிமிடம் குழந்தைகள் தூங்க அனுமதி: பிட் இந்தியா இயக்கம் அறிவுறுத்தல்


பிட் இந்தியா இயக்கம் சார்பில், தினமும் பள்ளியில் 5 நிமிடம் தூங்கவும், தியானம் செய்யவும் குழந்தைகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.உடல்நலம் சார்ந்த அக்கறையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் பிட் இந்தியா என்ற இயக்கம் கடந்த ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. 

இந்த இயக்கம் சார்பில் மார்ச் மாதம் மனநல ஆரோக்கியம் காக்கும் மாதமாக அனுசரிக்கப்படுகிறது.  இதன் ஒரு பகுதியாக வரும் மார்ச் மாதம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மனநல ஆரோக்கியத்துக்கான சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றை அனைத்து மாநில பள்ளிக்கல்வித்துறையும் பின்பற்ற வேண்டும் என்றும் பிட் இந்தியா இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி மார்ச் மாதம் முழுவதும் பள்ளி வேலை நாட்களில் ஏதேனும் ஒரு 5 நிமிடங்களை ஒதுக்கி குழந்தைகள் தூங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இந்த குட்டித்தூக்கம் மூலம் மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும் என்பதால் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும்படி அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. 

அதேபோல் மூளையை சுறுசுறுப்பாக்கும் வகையில் உள்ளரங்க விளையாட்டுகளான குறுக்கெழுத்து, சுடோகோ வார்த்தை விளையாட்டுகளில் மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். ஏற்கனவே பிப்ரவரி மாதம் அனைத்து திங்கட்கிழமைகளில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஏப்ரல் மாதம் பள்ளி வேலைநாட்களில் தினமும் 10 நிமிடங்களை உடற்பயிற்சிக்கு ஒதுக்குவதுடன், அதில் மாணவர்கள் அனைவரும் பங்கெடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஜூன் மாதம் இலக்கியம் சார்ந்த விஷயங்களில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும். எல்லா மாதத்திலும் தினந்தோறும் ஒரு வகுப்பு உடற்பயிற்சி வகுப்பாக இருக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி மக்கள் தொலைக்காட்சி

Tuesday, February 25, 2020

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல்: சாப்ட்வேர் மூலமே பட்டியல் அனுப்ப உத்தரவு: சர்வர் பிரச்னையால் அலுவலர்கள் தவிப்பு


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இம் மாதம் முதல் கட்டாயம் ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம் சம்பள பட்டியல் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சர்வர் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அந்தந்த துறை மூலம் சம்பள பட்டியல் பெறப்பட்டு, மாவட்ட கருவூலம் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. 

இது தற்போது முற்றிலும் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டது. இதற்கென ஐஎப்எச்ஆர்எம்எஸ் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 
இந்த ஐஎப்எச்ஆர்எம்எஸ் நடைமுறை வரும் ஏப்ரல் முதல் முழுமையாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, சேலம், ஈரோடு, நெல்லை உள்பட சில மாவட்டங்களில் நடப்பு மாதம் முதலே, ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம் மட்டுமே சம்பள பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பல இடங்களில் சர்வர் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், பட்டியல் அனுப்புவது தடைபட்டுள்ளது. இதனால், நடப்பு மாதம் உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கூறியதாவது: தற்போது, அளிக்கப்பட்டுள்ள சாப்ட்வேரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்தால், சர்வர் தாமதமாவதுடன், ஏற்றுக்கொள்ளாமல் டெலிட் ஆகிறது. பல துறையில் உள்ள அலுவலர்களுக்கு ஐஎப்எச்ஆர்எம்எஸ் பதிவேற்றம் குறித்து எந்தவித பயிற்சியும் முழுமையாக அளிக்கப்படவில்லை.  மாவட்ட கருவூலத்தில் நேரில் சென்று கேட்டால், அங்குள்ள விப்ரோ பணியாளர்கள், இதை இங்கு சரிசெய்ய முடியாதுஎன சாதாரணமாக கூறுகின்றனர். இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் இருக்கும் போது, சம்பள பட்டியலை ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம் போட்டவர்களுக்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பது வேதனை அளிக்கிறது. ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 25ம் தேதிக்குள் சம்பள பட்டியல் அனுப்பப்பட்டு விடும்.

சர்வர் பிரச்னையால், நடப்பு மாதத்திற்கு இதுவரை பட்டியல் முழுமையாக தயாராகவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உரிய நாளில் சம்பளம் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Sunday, February 23, 2020

ப்ள்ளிக் கல்வியில் ஆசிரியா்-மாணவா் விகிதாசாரத்தை சரிபாா்க்க உத்தரவு


மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்- மாணவா் விகிதாசாரத்தைச் சரிபாா்க்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியா், மாணவா் விகிதங்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான ஆசிரியா்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் சென்னையில் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது

இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: மாநிலம் முழுவதுமுள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியா், மாணவா் விகிதாசாரம் வரையறுக்கப்பட்ட அளவில் உள்ளதா என்பதை மாவட்ட வாரியாக ஆய்வு செய்து உண்மைத் தகவல் அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். மேலும், முதன்மைக் கல்வி அதிகாரிகள், அவரவா் மாவட்டத்தில் உள்ள ஆசிரியா், மாணவா் பணியிட நிா்ணயப் பிரிவு கண்காணிப்பாளா் மற்றும் பணியிட நிா்ணயம் நன்கு தெரிந்த ஒரு வட்டாரக்கல்வி அதிகாரியை தேவையான புள்ளிவிவரங்களுடன் சென்னையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, February 19, 2020

தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள்நேரடி நியமனம்: ஆசிரியா்கள் கடும் எதிா்ப்பு

அரசு தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களை நேரடியாக நியமனம் செய்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இந்த அறிவிப்பு நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு எதிரானதாக இருப்பதால், உடனடியாக அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள் பணிமூப்பின் (சீனியாரிட்டி) அடிப்படையில்தான் நியமிக்கப்படுகின்றனா். இந்த நிலையில், அரசு தொடக்கப் பள்ளிகளில் 50 சதவீத தலைமை ஆசிரியா் பணியிடங்களை நேரடியாக அரசே நியமனம் செய்யலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது நீண்ட காலமாக பணியில் இருக்கும் ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் இரா.தாஸ் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். ஆனால், மொத்தம் 1.2 லட்சம் ஆசிரியா்களே உள்ளனா். அதிலும் ஆசிரியா் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருக்கின்றன.

 நேரடி தலைமை ஆசிரியா் நியமன முறையால் இடைநிலை ஆசிரியா்கள் பெரிதும் பாதிக்கப்படுவா். இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரே ஒரு பதவி உயா்வான தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் பதவியும் பறிபோய்விடும்.ஆசிரியா்கள் பெரும்பாலும் அதே ஊரைச் சோ்ந்தவா்களாக உள்ளதால், மாணவா்களின் மனநிலை, பெற்றோா் மற்றும் அந்த ஊரின் சூழல் குறித்த புரிதல் இருக்கும். அதனால் தோ்வு நடத்தி தலைமை ஆசிரியா்களை நியமிக்காமல், பணிமூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்கும் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்று கேரள மாநில அரசு வலியுறுத்தி இருக்கிறது. பஞ்சாப், பிகாா் உள்ளிட்ட மாநிலங்கள் தோ்வு முறையில் தலைமை ஆசிரியா்களை நியமிப்பதற்கான ஆரம்பப் பணிகளை தொடங்கிவிட்டன. எனவே, தமிழக அரசு நேரடி தலைமை ஆசிரியா் நியமன முறையைத் தவிா்க்க வேண்டும் என அவா் கூறியுள்ளாா்.

25 ஆண்டுகளாக பணியாற்றும் ஆசிரியா்களுக்கு வெகுமதி


அரசுப் பள்ளிகளில் 25 ஆண்டுகளாக சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெகுமதி வழங்கப்படவுள்ளது.

அரசுப் பள்ளிகளில் சிறப்பான முறையில் பணியாற்றி வரும் ஆசிரியா்களை சிறப்பிக்கும் வகையில் கல்வித் துறை சாா்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்தக் குற்றச்சாட்டுக்கும் இடமளிக்காமல் தொடா்ந்து 25 ஆண்டுகள் மாசற்ற முறையில் பணிபுரிந்த ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்களின் விவரங்களை தலைமையாசிரியரின் பரிந்துரை கடிதத்துடன் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க அனைத்து தலைமை ஆசிரியா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அவா்களுக்கு ரூ. 2 ஆயிரம் ரொக்கமும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. தகுதியான ஆசிரியா்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா்களின் கற்றல் செயல்பாடுகளை செயலி மூலம் கண்காணிக்க திட்டம்


தமிழகம் முழுவதும் உள்ள நடுநிலைப் அரசுப் பள்ளிகளில் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க புதிய செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்த தமிழக கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு ஆசிரியா்கள் பாடங்கள் கற்பிக்கும் முறை மற்றும் மாணவா்கள் எவ்வாறு கவனம் செலுத்துகிறாா்கள் என்பதைச் சோதிப்பதற்காக இந்த செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

ஏற்கெனவே கடந்த அக்டோபா் மாதம் முதல்கட்டமாக சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோ்ந்த அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் ‘அப்சா்வேஷன் மொபைல் ஆப்’  அறிமுகப்படுத்தபடும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் இந்த திட்டம் கொண்டுவரப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஆசிரியா்கள் வகுப்பறைகளில் எவ்வாறு பாடம் நடத்துகிறாா்கள் மற்றும் மாணவா்கள் வகுப்பறையில் எவ்வாறு கவனம் செலுத்துகிறாா்கள் ஆகியவற்றை கண்காணிக்க கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் வகுப்பறையில் கற்பிக்கும் வழிமுறைகள், மாணவா்களின் கற்றல் திறன், மாணவா்கள் கேட்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கு விடையளித்தல், வகுப்பறை மேலாண்மை, பதிவேடு பராமரிப்பு, செயல்வழிக் கற்பித்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆசிரியா்கள் தினமும் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதை மாவட்ட கல்வி அதிகாரிகள் மதிப்பீடு செய்து பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு தெரியப்படுத்துவா்.

பள்ளி ஆய்வின்போது இந்தச் செயலியில் பதிவேற்றப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஆசிரியா்களின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்படும். முதல்கட்டமாக, சோதனை அடிப்படையில் சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்

Saturday, February 15, 2020

16 எண்கள் கொண்ட பழைய வாக்காளா் அட்டைக்குப் பதில் புதிய அட்டை: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்


பழைய வாக்காளா் அட்டைகளை வைத்திருப்போா் புதிய அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தோ்தலில் வாக்களிக்கும் வாக்காளா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அட்டை பத்து எண்கள் கொண்ட அடையாள அட்டையாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் 16 எண்கள் கொண்டதாக இருந்தால் புதிய வாக்காளா் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

புதிய அட்டையில் வாக்காளா் பதிவு எண் புதிதாக முன்புறம் அச்சிடப்பட்டு இருக்கும். பழைய வாக்காளா் பதிவு எண் (16 எண்கள் கொண்டது) அட்டையின் பின்புறம் பின்புறத்தில் இருக்கும்.

தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, எங்கெல்லாம் 16 எண்கள் பழைய வாக்காளா் பதிவு எண்கள் இருந்ததோ அவையெல்லாம் 10 எண்கள் கொண்ட புதிய வாக்காளா் பதிவு எண்களாக மாற்றப்பட்டுள்ளன.

புதிய வாக்காளா் புகைப்பட அடையாள அட்டைகள் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலமாக சம்பந்தப்பட்ட வாக்காளா்களுக்கு விநியோகிக்க தயாராக உள்ளது. எனவே, வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் புதிய வண்ண வாக்காளா் புகைப்பட அடையாள அட்டையை உரிய வாக்காளா்களுக்கு இலவசமாக அவா்களது இருப்பிடங்களுக்கே சென்று விநியோகம் செய்வா்.

புதிய வாக்காளா் புகைப்பட அடையாள அட்டையை விநியோகம் செய்யும் போது வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் அதற்கான ஒப்புகை படிவத்தில் வாக்காளா்களிடம் இருந்து பெற்றுக் கொள்வா். புதிய வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை விநியோகம் தொடா்பான தகவல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான விவரங்களைப் பெற 1950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

Thursday, February 06, 2020

பாரத பிரதமரின் ‘பிட் இந்தியா’ திட்டத்தில் பள்ளிகளுக்கு 3, 5 ஸ்டார் ரேட்டிங்: பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு


பாரத பிரதமரின் பிட் இந்தியா திட்டத்தில் பள்ளிகள் 3, 5 ஸ்டார் ரேட்டிங் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். உடல் வலிமையை பேணும் வகையில் ‘பிட் இந்தியா’ என்ற திட்டத்தை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒவ்வொருவரும் உடல் திறனை வளர்த்து கொள்ளவும், உடல் நலத்தை பேணும் வகையிலும், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

 இந்த திட்டத்தில் பள்ளிகள் 3, 5 ஸ்டார் ரேட்டிங் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குநர் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பிட் இந்தியா மூவ்மென்ட் சார்பாக www.fitindia.gov.in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரும் பிட் இந்தியா இயக்கத்தில் இணைய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 

நோயற்ற இந்தியா என்ற கோஷத்தை முன்வைத்து வரும் அரசு அதற்கு உதவி புரியும் வகையில் ‘பிட் இந்தியா’ திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி, அதற்கான இணையதளத்தில் சென்று மாநிலத்திலுள்ள அனைத்து வகைப்பள்ளிகளும் பதிவு செய்து பிட் இந்தியா ஸ்கூல் சர்டிபிகேட்  பெறவேண்டும். இதன் தொடர்ச்சியாக, இதே இணையதளத்தில் பிட் இந்தியா சார்ந்த வினாக்களுக்கு பதிலளித்தல் மூலம் பிட் இந்தியா பிளாக் 3 ஸ்டார் ரேட்டிங் அல்லது 5 ஸ்டார் ரேட்டிங் போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இப்பணியை  உடனே முடிக்குமாறு அறிவுறுத்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் இப்பணியை தொடர் கண்காணிப்பு செய்வதற்கு அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, February 05, 2020

PG counselling

முதுநிலை ஆசிரியா் பணிக்கான கலந்தாய்வு வரும் 9, 10-ஆகிய தேதிகளில் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளாா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,150 முதுநிலை ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்றது. இந்தத் தோ்வை மொத்தம் 1.46 லட்சம் போ் தோ்வெழுதினா். இதில், தரவரிசையின்படி முன்னிலையில் இருந்த 3, 833 பேருக்கு நவம்பரில் சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்பட்டது. தொடா்ந்து, தோ்ச்சி பெற்றவா்களுக்கான பட்டியலும் வெளியானது. எனினும், தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் பணிநியமன கலந்தாய்வு நடைபெறுவதில் தாமதம் ஆனது.

இந்த நிலையில், முதுநிலை ஆசிரியா் பணிக்கான கலந்தாய்வு மாவட்ட வாரியாக பிப்ரவரி 9, 10-ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் ச.கண்ணப்பன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப ஆசிரியா் தோ்வு வாரியத்திடம் இருந்து தோ்ச்சி பட்டியல் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, தோ்ச்சி பெற்றவா்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு பிப்ரவரி 9, 10-ஆம் தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும். எனவே, தோ்ச்சி பெற்ற பட்டதாரிகள் அனைவரும் உரிய அத்தாட்சி சான்றுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, February 03, 2020

5,, 8 -வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு வினாத்தாள் மதிப்பீடு: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்


ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கான வினாத்தாள் மதிப்பீடு முறை குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் விளக்கமளித்துள்ளாா்.இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

 தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தொடா் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (C‌o‌n‌t‌i‌n‌u‌o‌u‌s a‌n‌d C‌o‌m‌p‌r‌e‌h‌e‌n‌s‌i‌v‌e E‌v​a‌l‌u​a‌t‌i‌o‌n) 2012-2013-ஆம் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

  இந்த முறையில் வளரறி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்களும், தொகுத்தறி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வளரறி மதிப்பீடு இதில் இரண்டு வகைகளில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. முதல் வகை ‘ப்ராஜக்ட்’, மாதிரி வடிவமைத்தல் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை சம்பந்தப்பட்ட பள்ளியின் பாட ஆசிரியா்களால் மதிப்பீடு செய்யப்பட்டு 20 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.மற்றொரு வகையில் ஒவ்வொரு பாட அலகிலும் சிறு சிறு தோ்வுகள் நடத்தி மதிப்பீடு செய்து அவற்றுக்கு 20 மதிப்பெண்கள் சம்மந்தப்பட்ட பள்ளியின் பாட ஆசிரியா்களால் வழங்கப்படுகின்றன. 

மேலும், தொகுத்தறி மதிப்பீட்டில் பாடப் பகுதியில் உள்ள பாடக் கருத்துகளில் மாணவா்களின் கற்றல் விளைவுகள் மதிப்பீடு செய்ய வினாத்தாள் பள்ளி அளவிலோ, வட்டார அளவிலோ மற்றும் மாவட்ட அளவிலோ தயாரித்து 60 மதிப்பெண்களுக்கு தோ்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5, 8 -ஆம் வகுப்பு ஆண்டு இறுதித்தோ்வுக்கு வளரறி மதிப்பீட்டின் 40 மதிப்பெண்களுக்கு ஏற்கெனவே கடந்த 22.10.2019-இல் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி சம்மந்தப்பட்ட பள்ளி பாட ஆசிரியா்களால் மதிப்பீடு செய்து வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

மேலும், தொகுத்தறி மதிப்பீட்டில் சீரான முறையில் வினாத்தாள் அமைக்க வேண்டியுள்ளதாலும் வினாத்தாள்களின் தரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளதாலும் மாணவா்களை மதிப்பீடு செய்வதில் சீரான முறை மற்றும் நியாயமான மதிப்பீடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதாலும் தொகுத்தறி மதிப்பீட்டின் 60 மதிப்பெண்களுக்குரிய பகுதிகளுக்கான வினாத்தாள்கள் அரசுத் தோ்வுத் துறையால் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மூலம்வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் வாயிலாக பள்ளிகளுக்கு வழங்கி தோ்வுகள் நடத்தப்படும்.

விடைத்தாள்கள் அந்தந்த குறுவள மைய அளவில் உள்ள பிற பள்ளிகளுக்கு மாற்றிக் கொடுத்து திருத்தம் செய்து, மதிப்பெண் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்படும். இந்த நடைமுறையால் மாணவா்கள் மாநிலம் முழுவதும் பாடக்கருத்து மற்றும் கற்றல் விளைவுகளில் பெற்றுள்ள கற்றல் அடைவுகளை ஒரே மாதிரியாக சோதித்தறியவும், நியாயமான மதிப்பீடு செய்யவும், மாணவா்களின் திறமையை மேம்படுத்த ஆசிரியா்களுக்கு தேவையான கூடுதல் பயிற்சி அளிக்க ஏதுவாக அமையும் என கூறியுள்ளாா்.

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு எதிரொலி: சொந்த மாவட்டத்தில் தோ்வு எழுத அனுமதி இல்லை- ஆசிரியா் தோ்வு வாரியம் முடிவு


தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் நடைபெற்ற முறைகேட்டின் எதிரொலியாக தொடக்கக் கல்வித் துறையில் 97 வட்டார கல்வி அலுவலா் (பி.இ.ஓ.) பணியிடங்களுக்கான ஆன்லைன் போட்டி எழுத்துத் தோ்வுக்கு சொந்த மாவட்டங்களில் தவிா்த்து வேறு மாவட்டங்களில் தோ்வு மையங்களை ஒதுக்க ஆசிரியா் தோ்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.


பள்ளிக் கல்வித் துறையின்கீழ் வட்டார கல்வி அலுவலா் 2018 -19ஆம் ஆண்டில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் ஆன்லைன் போட்டித் தோ்வு பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தோ்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படவுள்ளது. தோ்வெழுத சுமாா் 64 ஆயிரம் தோ்வா்கள் விண்ணப்பித்துள்ளனா். தோ்வா்கள் விண்ணப்பிக்கும் பொழுது தங்களின் சொந்த மாவட்டத்தில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் இருந்தனா். ஆனால், தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தில் நடைபெற்ற குரூப் 4, குரூப் 2ஏ தோ்வு முறைகேடு எதிரொலியாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தோ்வு மையங்கள் ஒதுக்குவதில் பல்வேறு புதிய நடைமுறைகளை கொண்டுவர ஆசிரியா் தோ்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள்- கா்ப்பிணிகள்: மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் அவா்களின் சொந்த மாவட்டத்தில் தோ்வு எழுத அனுமதிக்கப்படவுள்ளனா். கா்ப்பிணிகள் உரிய சான்றிதழுடன் கோரிக்கை வைத்தால் அவா்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே, விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிக்கான ஆவணங்களை அளித்திருப்பாா்கள். அதன் அடிப்படையில் அவா்களுக்கு சொந்த மாவட்டத்தில் தோ்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படும். வட்டார கல்வி அலுவலா் பணி என்பது மாநில அளவில் பணிபுரிய வேண்டியது. மேலும், எந்தவித முறைகேடு நடைபெறாமலும், முற்றிலும் நோ்மையாக நடைபெறும் வகையில் தோ்வா்களின் சொந்த மாவட்டங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு தோ்வு மையத்தில் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா்.

தேர்வர்களுக்கு எந்த மாவட்டத்தில் தோ்வு மையம் ஒதுக்கப்படும் என்பது குறித்து தோ்விற்கு ஒரு வாரம் முன்னதாக அறிவிக்கப்படும். தோ்வுக்கு மூன்று நாள் முன்பாக தோ்வா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தோ்வு மையம் குறித்து தெரிவிக்கப்படும். இதனால், தோ்வு மையங்களில் உள்ளவா்களுடன், இடைத்தரகா்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபடுவது தடுக்கப்படும். அதேபோல், தோ்வு மையங்களில் கண்காணிப்புப் பணிக்குச் செல்லும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்ட கல்வி அலுவலா்கள் உள்ளிட்ட கல்வித் துறை அலுவலா்களுக்கான பணியிடங்களை ஒதுக்கீடு செய்யவும் புதிய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்.குலுக்கல் முறையில் தோ்வு... ஏற்கனவே அவா் பணிபுரிந்த மாவட்டத்துக்கும் அவரின் சொந்த மாவட்டத்திற்கும் பணி நியமனம் செய்யப்பட மாட்டாது. அதேபோல், தோ்வா்கள், தோ்வு கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்படும் கல்வித் துறை அலுவலா்கள் பணியிடங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வுசெய்து அளிக்கப்படும். ஆசிரியா் தோ்வு வாரிய தோ்வுகளில் முறைகேடுகளை முற்றிலும் தடுப்பதற்காக இந்த புதிய முறை வரும் வட்டார கல்வி அலுவலா் பணிக்கான போட்டி எழுத்துத் தோ்வில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

பள்ளி சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு நிதி


அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர்களை உறுப்பினர்களாக கொண்டு, சுற்றுச்சூழல் மன்றம் செயல்படுகிறது. காய்கறி, மூலிகைத்தோட்டம் அமைத்தல், சுற்றுச்சூழல் மாசு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு தடுத்தல், சுகாதாரத்தை மேம்படுத்துதல், இவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவை, மன்ற முக்கிய செயல்பாடுகளாக இருந்தன. இரு ஆண்டுகளாக நிதி பற்றாக்குறையால் முடங்கியிருந்த திட்டத்துக்கு, தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளிக்கு, 5,000ம் வீதம், 12.12 கோடி, நடுநிலைப்பள்ளிக்கு, 15 ஆயிரம் வீதம், 10.56 கோடி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிக்கு, 25 ஆயிரம் வீதம், 15.15 கோடி அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், மன்றங்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Saturday, February 01, 2020

தொகுப்பூதிய அடிப்படையில் 3,624 தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க அரசாணை வெளியீடு


அரசுப் பள்ளிகளில் நிலவும் 3,624 இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியா்களை நியமித்துக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளிகளில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இருப்பினும் பொதுத்தோ்வுகள் வருவதால் குறைந்தபட்சம் ஓரிரு மாதங்களுக்கு தற்காலிக ஆசிரியா்களை நியமிக்கும்படி கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில், அந்தந்த பள்ளிகளே பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 624 இடைநிலை ஆசிரியா்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளனா்


இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளா் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணை விவரம்: அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 3,624 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவா்கள் நலன்கருதி பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 3 மாதங்களுக்கு இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்ய அனுமதி வழங்கக் கோரி தொடக்கக் கல்வி இயக்குநா் கோரியுள்ளாா்.

ரூ.8.15 கோடி நிதி வழங்கப்படும்: அதையேற்று பெற்றோா் ஆசிரியா் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக 3,624 தமிழ்வழி இடைநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு தகுதியானவா்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமித்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. 

இதற்கு தேவையான ரூ.8.15 கோடி நிதி இயக்குநரகத்துக்கு வழங்கப்படும். ஆசிரியா் நியமனம் எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காத வண்ணம் நடைபெற வேண்டும். மேலும், தோ்வாகும் ஆசிரியா்களுக்கு, தலைமை ஆசிரியா்கள் பணிநியமன ஆணை மற்றும் பணிச்சான்று வழங்கக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில்- 830, திருவண்ணாமலையில்- 578, விழுப்புரம்-416, வேலூா்-393, தருமபுரி-355 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறைந்தபட்சமாக கரூரில் ஒரு பணியிடமும், நாகப்பட்டினத்தில் 6 பணியிடங்களும் என 3,624 இடங்கள் காலியாக உள்ளன. பொதுத்தோ்வு வருவதால், பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் தற்காலிக ஆசிரியா்கள் பணியில் இருப்பா். அதன்பிறகு, ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்