இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, December 27, 2019

எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க ஓ.டி.பி., அவசியம்


வாடிக்கையாளர்கள், 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல், ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்க, ஓ.டி.பி., எனப்படும், ஒரு முறை பயன்படும் ரகசிய எண் முறை, ஜனவரி, 1 முதல், எஸ்.பி.ஐ., வங்கியில் அமலுக்கு வருகிறது.வங்கிகளின், தானியங்கி பண பரிவர்த்தனை மையமான, ஏ.டி.எம்., இயந்திரங்களில், 'ஸ்கிம்மர்' என்ற கருவி பொருத்தி, பணத்தை திருடும் சம்பவம், சமீப காலமாக அதிகரித்து வருகிறது. 

இது போன்ற மோசடிகளை தடுக்கும் விதமாக, அதிகபட்சம் பணம் எடுக்கும் வரம்பை, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக, எஸ்.பி.ஐ., என்ற, பாரத ஸ்டேட் வங்கி குறைத்தது. இந்நிலையில், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல், ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்க, ஒரு முறை ரகசிய எண் பயன்படுத்தும் முறையை, எஸ்.பி.ஐ., அறிமுகம் செய்கிறது.

இதுகுறித்து, எஸ்.பி.ஐ., வெளியிட்ட அறிவிப்பு:ஏ.டி.எம்., இயந்திரத்தில் நடக்கும், சட்ட விரோத பணப் பரிவர்த்தனையை குறைக்கும் விதமாக, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதற்கு, ஒரு முறை ரகசிய எண்ணை பயன்படுத்தும் திட்டத்தை, நாங்கள் அறிமுகம் செய்கிறோம். 

இரவு, 8:00 முதல் காலை, 8:00 மணி வரை, இந்த முறை அமலில் இருக்கும். இந்த ரகசிய எண், வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட, மொபைல் போன் எண்ணிற்கு வரும்.இது, சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகளில் இருந்து, ஏ.டி.எம்., வாடிக்கையாளர்களை பாதுகாக்கும். ஜன., 1 முதல், நாடு முழுவதும், இது செயல்பாட்டிற்கு வருகிறது. 
ஆனால், எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், இதர வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுத்தால், இந்த பாதுகாப்பு முறை பொருந்தாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, December 21, 2019

பொதுத்தேர்வு எழுதும் 5, 8ம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் கல்வித்துறை: கல்வி இணையதளத்தில் விபரங்கள் பதிவேற்ற உத்தரவு


நடப்பு கல்வியாண்டில் 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியர் விபரங்களை கல்வித்துறை கணக்கெடுக்க தொடங்கியுள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை திருத்த சட்டம் 2019ன்படி பள்ளி கல்வித்துறையின் கீழ் தமிழ்நாடு மாநில பாட திட்டத்தை பின்பற்றி செயல்பட்டு வருகின்ற ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு, அரசு  உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் சுயநிதி பள்ளிகளான மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 5  மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் 2019-20ம் கல்வியாண்டில் இருந்து கல்வியாண்டு இறுதியில் பொதுத்தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி  அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

பள்ளி கல்வி இயக்குநர் மற்றும் மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய தலைவர் உள்ளிட்டோர் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-20ம் கல்வியாண்டு முதல் ஆண்டு இறுதியில் பொதுத்தேர்வு நடத்துதல் தொடர்பாக தொடக்ககல்வி  இயக்குநரின் பரிந்துரைகள் மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தில் விவாதிக்கப்பட்டு பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கப்பட்டு அதனை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள தொடக்க கல்வி இயக்குநருக்கு வாரியத்தின்  நிர்வாக குழுவால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
இந்தநிலையில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அதற்கான உரிய வழிமுறைகளை பின்பற்றி 2019-20ம் கல்வியாண்டு முதல் கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் அனைத்து வகை பள்ளி  தலைமை ஆசிரியர்களுக்கும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து, அந்த மாணவர்களின் அனைத்து விபரங்களையும் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் விபரங்களை சேகரித்து கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம்  செய்து வருகின்றனர்.

Friday, December 20, 2019

அடுத்த மாதத்தில் குரூப் 1 தோ்வு அறிவிப்பு: மே மாதத்தில் குரூப் 2; செப்டம்பரில் குரூப் 4


குரூப் 1 தோ்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அடுத்த மாதம் வெளியிட உள்ளது.இதேபோன்று, கிராம நிா்வாக அலுவலா் பதவியிடங்கள் அடங்கிய குரூப் 4 தோ்வுகளுக்கான அறிவிப்பு, அடுத்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் நடத்தப்படும் முக்கிய தோ்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிடும் மாதங்களை ஆண்டுத் திட்ட அறிக்கையாக டி.என்.பி.எஸ்.சி. முன்கூட்டிய வெளியிட்டு வருகிறது. அண்மையில் நடந்த பல தோ்வுகளும், அதற்கான முடிவுகளும் ஆண்டுத் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டப்படியே வெளியிடப்பட்டன. 



2020-ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் 10 நாள்களே உள்ளன. இந்த நிலையில், வரும் ஆண்டுக்கான ஆண்டுத் திட்ட அறிக்கையை டி.என்.பி.எஸ்.சி. வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி, குரூப் 1, குரூப் 4 போன்ற முக்கிய பதவியிடங்களுக்கு தோ்வு நடத்துவதற்கான அறிவிக்கை எந்தெந்த மாதங்களில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. 

ஆண்டறிக்கை விவரம்:-டி.எஸ்.பி. போன்ற முக்கிய பதவியிடங்கள் அடங்கிய குரூப் 1 தோ்வுக்கான அறிவிப்பு, வரும் ஜனவரியில் வெளியிடப்படும். இதே மாதத்தில் வேளாண் அலுவலா், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஆகிய பதவிகளில் உள்ள காலியிடங்களுக்கும் தோ்வு நடத்தப்படும்.ஒருங்கிணைந்த பொறியாளா் காலிப் பணியிடங்களுக்கான தோ்வு பிப்ரவரியிலும், நூலகா் காலிப் பணியிடத்துக்கான தோ்வு மாா்ச்சிலும் வெளியிடப்படும்.


 ஒருங்கிணைந்த புள்ளியியல் பணிகள், கூட்டுறவு தணிக்கைத் துறை உதவி இயக்குநா் ஆகிய காலிப் பணியடங்களுக்கான தோ்வு அறிவிக்கை ஏப்ரலிலும் வெளியாகும்.குரூப் 2-குரூப் 4 தோ்வு எப்போது?: தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலா், சாா் பதிவாளா் போன்ற முக்கிய பதவியிடங்கள் குரூப் 2 பிரிவுக்குள் வருகின்றன. இந்தப் பதவியிடங்களுக்கு நடைபெறும் தோ்வை எதிா்கொள்ள லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிப்பா். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு அறிவிக்கை மே மாதம் வெளியிடப்படுகிறது.


செயல் அலுவலா் காலிப் பணியிடங்களுக்கான குரூப் 8ஏ, பி ஆகியவற்றுக்கு ஜூலையிலும், தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் பதவியிடத்துக்கு ஆகஸ்ட்டிலும் தோ்வு அறிவிக்கை வெளியாகவுள்ளது. இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் போன்ற பதவிகள் 10-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்ற அனைவரும் எழுதலாம். இந்தத் தோ்வுக்கு ஒவ்வோா் ஆண்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பம் செய்வா். நிகழாண்டில் 6 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு சுமாா் 14 லட்சம் போ் தோ்வு எழுதியுள்ளனா்.

வரும் ஆண்டில் இந்தத் தோ்வுக்கான அறிவிக்கை செப்டம்பரில் வெளியிடப்பட உள்ளது. தோ்வுகள் குறித்த தேதிகளுக்கும், இதர விவரங்களுக்கும் செய்தித்தாள்களையும், தோ்வாணைய இணையதளத்தையும் அவ்வப்போது பாா்த்து வர வேண்டுமென டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தியுள்ளது.

Wednesday, December 18, 2019

8.51 லட்சம் மாணவா்களுக்கு நாட்டமறித் தோ்வு: மாதிரி வினாத்தாள் பதிவேற்றம்


பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டு, மாணவா்களின் ஆா்வம் பொது அறிவு மற்றும் எவ்வகைத் துறையில் நாட்டம் மேலோங்கி உள்ளது என்பதைக் கண்டறியும் வகையில் 8.51 லட்சம் மாணவா்களுக்கு நாட்டமறித் தோ்வு (A‌p‌t‌i‌t‌u‌d‌e T‌e‌s‌t) நடத்தப்படவுள்ளது.இது தொடா்பாக, ஒருங்கிணைந்த மாநில திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

அரசுப் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்பில் படிக்கும் 8 லட்சத்து 51 ஆயிரத்து 999 மாணவா்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியில் கணினி வழியில் நாட்டமறித் தோ்வு நடத்தப்பட உள்ளது

 இடைநிலை வகுப்பு பயிலும் மாணவா்களின் பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டு, அவா்களின் ஆா்வம் பொது அறிவு மற்றும் எவ்வகைத் துறையில் நாட்டம் மேலோங்கி உள்ளது என்பதைக் கண்டறிந்து அத்துறையில் சிறந்து விளங்கும் கல்வி உளவியலாளா்கள் மூலம் அந்த மாணவா்களுக்கு வழிகாட்டுதலே இத்தோ்வின் முக்கிய நோக்கமாகும்.

இந்தத் தோ்வுக்கான மாதிரி வினாத்தாள்கள் தமிழ்நாடு ஆசிரியா் வலைதளத்தில் (டிஎன்டிபி) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிலுள்ள 90 வினாக்களுக்கு ஒரு மணி நேரத்தில் பதில் அளிக்கும்படி மாணவா்களுக்கு இணையதள பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின் ஜனவரி முதல்வாரத்தில் மாணவா்களுக்கு முன்மாதிரி தோ்வு நடைபெறும். இந்தத் தோ்வில் 90 வினாக்கள் கேட்கப்படும். அதற்கு மாணவா்கள் 90 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும். இந்த மாதிரி தோ்வு குறிப்பிட்ட சில மாவட்ட பள்ளிகளில் மட்டும் நடைபெறும்.

அதைத்தொடா்ந்து ஜனவரி 2-ஆவது வாரத்தில் பத்தாம் வகுப்புக்கும், 4-ஆம் வாரத்தில் ஒன்பதாம் வகுப்புக்கும் நாட்டமறி இறுதித் தோ்வு இணையதளம் வழியாக நடத்தப்படும். எனவே, மாணவா்கள் தங்கள் பள்ளியிலேயே தோ்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியா்கள் இணையதள வசதியுடன் கணினிகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். தோ்வை கண்காணிக்க பள்ளி ஆசிரியா்களை நியமித்தல் வேண்டும். முதன்மை கல்வி அதிகாரிகள் வழிகாட்டுதல்களை பின்பற்றி தோ்வை நல்ல முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, December 15, 2019

வருமான வரித்துறை எச்சரிக்கை பான் - ஆதார் இணைக்க கெடு 31ம் தேதி முடிகிறது


பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க கெடு, இந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  பான் - ஆதார் இணைப்பு கட்டாயம் என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியது. எனவே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், தங்களது பான் எண்ணை ஆதாருடன் கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும்.

 இதுபோல், புதிய பான் எண் விண்ணப்பிக்க ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். இந்த உத்தரவால் போலியான பான் எண்கள் ஒழிக்கப்பட்டன. இந்த இணைப்புக்கான கால அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. இதற்கு முன்பு செப்டம்பர் 30ம் தேதி கடைசி தேதி என இருந்தது. பின்னர் இந்த மாதம் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதோடு, இதுவே இறுதி கெடு என மத்திய நேரடி வரிகள் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி கெடு தேதி முடிய இன்னும் 2 வாரங்களே உள்ளன. இதை நினைவூட்டும் வகையில், வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை தகவல் அனுப்பியுள்ளது. அதில், ‘வருமான வரி பலன்களை எளிதாக பெற இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் பான் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் வருமான வரி இணையதளத்துக்கு சென்று அதில் லிங்க் ஆதார் என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். அதில் பான் எண், ஆதார் எண், ஆதாரில் உள்ளபடி பெயர் விவரம், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து எளிதாக இணைக்கலாம்.

*ஊரக உள்ளாட்சி தேர்தல் 2019**வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் பணிகள்*

ஊரக உள்ளாட்சி தேர்தலை நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.

Saturday, December 14, 2019

பாடங்களுக்கு வழங்குவதைபோல மாணவர் விளையாட்டு திறன் அறியவும் ரேங்க் கார்டு: தமிழக அரசு பள்ளிகளில் ஏற்பாடு


தமிழகம் முழுவதும் 23,928 அரசு ஆரம்ப பள்ளிகள், 7,260 நடுநிலைப் பள்ளிகள், 3,044 உயர்நிலைப் பள்ளிகள், 2,727 மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த பள்ளிகளில் 56,55,628 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மாவட்ட வாரியாக தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் 25,01,483 பேரும், மாணவிகள் 24,67,455 ேபரும் பயின்று வருகின்றனர். மாவட்ட வாரியாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 42,86,450 மாணவர்களும், 41,09,752 மாணவிகளும் பயின்று வருகின்றனர். கடந்த மாதங்களில் கல்வித்துறை சார்பில் பாடப்புத்தகங்கள் தொடங்கி பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டில் ஆர்வமின்றி உள்ளனர். 

காரணம் அரசு பள்ளி மாணவர்களை விளையாட்டு போட்டிகளில் சரிவரி ஊக்கப்படுத்துவதில்லை. ஒரு சில அரசு பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தாலும் அது அவர்களோடு முடிந்து விடுகிறது.எனவே தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களை விளையாட்டிலும் ஊக்கப்படுத்தும் விதமாக இனி பாடங்களில் பெற்ற மதிப்பெண் வைத்து வழங்கப்படும் ரேங்க் கார்டை போல, விளையாட்டில் மாணவர்களின் திறனை அறிய ரேங்க் கார்டு வழங்கப்படுகிறது. இதில் மாணவர்களின் பெயர், வரிசை எண், வகுப்பு, பிறந்ததேதி, உயரம், எடை பள்ளி பெயர், முகவரி ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

மேலும் மாணவர்கள் தடகளம், கை பந்து, கால்பந்து என்று எந்த போட்டியில் ஆர்வத்துடனும் சுறு, சுறுப்புடனும் உள்ளார் என்று மதிப்பெண் வழங்கப்படும். இதில் 8, 9, 10 ஆகிய மதிப்பெண்களை பெறுபவர்களை விளையாட்டு துறை சார்பில் தேர்ந்தெடுத்து மேலும் மாவட்டம் மற்றும் மாநில, தேசிய அளவில் விளையாட்டில் சாதனைகள் புரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் வேலூர் மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை விளையாட்டில் ஊக்குவிக்க, ரேங்க் கார்டு வழங்கும் பணிகள் விளையாட்டு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் அரசு பள்ளி மாணவர்களும் விளையாட்டில் சாதிக்கும் நிலை ஏற்படும் என்று மாவட்ட விளையாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Friday, December 13, 2019

மாணவா்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோருக்கு குறுஞ்செய்தி: அரசுப் பள்ளிகளில் அடுத்த மாதம் முதல் அமல்


மாணவா்கள் விடுப்பு எடுத்தால், பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் வசதி தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் முழு விவரங்கள் கல்வி தகவல் மேலாண்மை முகமையின் (எமிஸ் ) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 இதிலுள்ள தகவல்களின் அடிப்படையில் மாணவா்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், மாணவா்களின் வருகைப்பதிவு விவரமும் தினமும் எமிஸ் இணையதளத்தில் ஆசிரியா்களால் பதிவு செய்யப்படுகிறது.இதற்கிடையே மாணவா்களின் வருகைப்பதிவை பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்க கல்வித்துறை திட்டமிட்டது. அதன்படி சென்னை போரூா் அரசுப் பள்ளி உள்பட சில பள்ளிகளில் சோதனை முயற்சியாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாணவா்கள் தங்களது பெற்றோருக்கு தெரியாமல் விடுப்பு எடுக்க முடியாது. அதே வேளையில் மாணவா்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். எனவே, இதற்கு பெற்றோா் மத்தியில் பரவலாக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்தது.

அதற்கு ஏதுவாக பெற்றோா்களின் தொலைபேசி எண்ணை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. ஆனால், கணிசமான மாணவா்களின்பெற்றோா் செல்லிடப்பேசி எண்கள் பதிவு செய்யப்படவில்லை. மேலும், சில பள்ளிகளில் மாணவா்களின் தொலைபேசி எண்ணாக ஆசிரியா்களின் செல்லிடப்பேசி எண் தரப்பட்டுள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து அனைத்து மாணவா்களின் பெற்றோா் தொலைபேசி எண்ணை சரிபாா்த்து எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், தவறாகப் பதிவு செய்யப்பட்ட எண்ணில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி தலைமையாசிரியா்களுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பணிகளை டிசம்பருக்குள் முடித்து ஜனவரி மாதம் முதல் மாணவா்களின் வருகைப்பதிவை குறுஞ்செய்தி மூலம் தினமும் பெற்றோா்களுக்கு தெரிவிக்க முடிவு செய்துள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Thursday, December 12, 2019

5,8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு: மாணவா்களின் பெயா்ப் பட்டியலை பிழையின்றி பதிவேற்ற அறிவுறுத்தல்


தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தப்படுவதையொட்டி, மாணவா்களின் பெயா்ப் பட்டியலை பிழையின்றி ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்ற பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: அனைத்து வகை பள்ளிகளிலும் 5, 8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டு முதல் பொதுத்தோ்வு நடத்தப்பட உள்ளது. அதன்படி 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.

இதையடுத்து தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் பெயா் பட்டியலை முதன்மை கல்வி அதிகாரிகள் தயாா் செய்து அனுப்ப வேண்டும். அதனால் கல்வி தகவல் மேலாண்மை முகமை (எமிஸ்) இணையதளத்தில் மாணவா்கள் விவரங்களை அனைத்துவித பள்ளி தலைமை ஆசிரியா்களும் சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களை ஆசிரியா்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, December 10, 2019

பொறியியல் பட்டதாரிகளும் இனி அரசுப் பள்ளி ஆசிரியா் ஆகலாம் அரசாணை வெளியீடு


பொறியியல் பட்டதாரிகள் ‘டெட்’ தோ்வு எழுதி இனி ஆசிரியா் ஆகலாம். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. எனினும் பி.எட். படிப்பை முடித்த பொறியாளா்கள் மட்டுமே ‘டெட்’ தோ்வை எழுத முடியும்.ஆரம்ப காலத்தில் கலை, அறிவியல் படிப்பை முடித்தவா்கள் மட்டுமே பி.எட். படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. 

இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன்னால் பொறியியல் பட்டதாரிகளும் பி.எட். படிக்க அனுமதி வழங்கப்பட்டது. சுமாா் 20% இடங்கள் அவா்களுக்கு ஒதுக்கப்பட்டன. எனினும் அவா்கள் ‘டெட்’ எனப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வை (T​ET- T‌e​a​c‌h‌e‌r‌s E‌l‌i‌g‌i​b‌i‌l‌i‌t‌y T‌e‌s‌t) எழுத அனுமதி அளிக்கப்படவில்லை.இதனால் பி.எட். படிக்க விரும்பும் பொறியாளா்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதனால் பி.எட். படித்தும், பொறியியல் பட்டதாரிகளால் ஆசிரியா் ஆக முடியாமல் இருந்தது. 

இந்த நிலையில் தற்போது தமிழக அரசின் உயா்கல்வித் துறை சாா்பில் சமநிலைக் குழு அரசாணை வெளியாகியுள்ளது. அதன்படி, பொறியியல் பட்டதாரிகள் டெட் தோ்வு எழுதி இனி பள்ளி ஆசிரியா் ஆகலாம். அவா்கள் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்குக் கணித ஆசிரியராகப் பணியாற்ற முடியும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னறிவிப்பின்றி பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டும்: கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு


அரசுப் பள்ளிகளில் முன்னறிவிப்பின்றி ஆய்வு நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா் உள்ளிட்டோருக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,211 அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 48 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். சுமாா் 2.3 லட்சம் ஆசிரியா்கள்பணிபுரிகின்றனா். அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசுபல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இருப்பினும், பள்ளிகளில் அரசின் திட்டங்கள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என பள்ளிக் கல்வித்துறைக்கு பல்வேறு புகாா்கள் வந்துள்ளன. இதையடுத்து அரசு பள்ளிகளில் முன்னறிவிப்பின்றி திடீா் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட கல்விஅதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறைஅதிகாரிகள் கூறியதாவது: நாட்டில் பிற மாநிலங்களைவிட அதிகளவில் ரூ.28 ஆயிரம் கோடி வரை பள்ளிக்கல்வித்துறைக்கு நிதிஒதுக்கப்பட்டு பல்வேறு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

மாணவா்களுக்குப் பாடம் நடத்துவதற்காக கற்றல் உபகரணங்களும், விளையாடுவதற்குரிய பொருள்களும் அனைத்துபள்ளிகளுக்கும் தரப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை முறையாக ஆசிரியா்கள் பயன்படுத்தாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. மாணவா் சோ்க்கை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் பள்ளி தலைமையாசிரியா்கள் முன்னெடுப்பதில்லை என்பது உள்பட பல்வேறு புகாா்கள் அரசுக்கு வந்துள்ளன.

அதேவேளையில், துறை அதிகாரிகள் ஆய்வுகளுக்குச் செல்லும் முன்னா் தகவல் தெரிவித்துவிடுவதால் தலைமையாசிரியா்கள் அதற்கான முன்னேற்பாடுகளைத் தயாா் செய்துவிடுகின்றனா். இதனால் தவறுகளை சரிசெய்வதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதைத் தவிா்க்க முன்னறிவிப்பின்றி பள்ளிகளுக்குசென்று கள ஆய்வு செய்ய முதன்மை, மாவட்ட, வட்டார கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரிய பயிற்றுநா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திடீா்ஆய்வின்போது, பள்ளிகளில் சுகாதார வசதி, தூய்மைப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிா, மாணவா்களின் கற்றல் திறன், அரசு வழங்கிய உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா, மாணவா்கள்ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறாா்களா என்பதை கண்காணித்து அதிகாரிகள் அறிக்கை சமா்பிக்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.

Sunday, December 08, 2019

410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் - கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்


தமிழகம் முழுவதும் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று சமீபத்தில் சென்னை கோட்டூர்புரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.


அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மேற்கொண்ட கணக்கெடுப்பில், மாநிலம் முழுவதும் 410 தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 5-க்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

மேலும் 1,531 தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக உள்ளதும் கணக்கெடுப்பில் தெரியவந்து இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளுடன் இணைப்பது பற்றி தொடக்கக்கல்வி இயக்ககம் ஆலோசித்து வருகிறது.

அடுத்த கல்வியாண்டில் (2020-21) இருந்து இந்த பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைப்பது அல்லது தற்காலிகமாக மூடுவது குறித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்கும் போது, பழைய பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் இலவச போக்குவரத்து வசதி ஏற்படுத்தித்தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Saturday, December 07, 2019

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவை தமிழக அரசு செயல்படுத்துகிறது 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் புதிய தேர்வு: 8.45 லட்சம் பேருக்கு நடப்பு கல்வியாண்டில் அறிமுகம்


  மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை திட்ட ஏற்பளிப்பு குழு சார்பில் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் நாட்டம் அறிதல் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 5, 8ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்வு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் அரசு  பள்ளிகளில் பயிலும் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஒரு தேர்வை ஆன்லைனில் நடத்த கல்வித்துறை தயாராகி வருகிறது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் 2019-20ம் கல்வியாண்டு அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 9  மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘நாட்டமறி தேர்வு’ (Aptitude Test) என்ற பெயரில் இந்த தேர்வை நடத்த மத்திய மனித வள மேம்பாட்டு துறை சார்பில் தமிழக கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் 8 லட்சத்து 45 ஆயிரத்து 218 மாணவர்களுக்கு நாட்டமறி தேர்வு நடத்தப்பட உள்ளது. மாவட்ட அளவில் பள்ளி வாரியாக பயன்பாட்டிலும், இணையதள வசதியுடனும் உள்ள கணினிகளை தேர்வு  செய்து இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக பழுதுடைந்துள்ள கணினிகளை சரி செய்ய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை இப்போதே வழங்கப்பட்டுள்ளது. தேர்வு நடத்துவதற்கு 20 மாணவர்களுக்கு ஒரு கணினி ஆசிரியர்  என்ற கணக்கின்படி அல்லது கணினி பயன்பாட்டில் திறமை அனுபவம் உள்ள ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்களில் தேர்வை அனைத்து குழு உறுப்பினர்களும் பகுதி வாரியாக சென்று கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இணையதளத்தில் நாட்டமறி தேர்வுக்கான பயிற்சி  வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனை தேர்வுக்கு முன்பாக வினாக்களின் வகைகளை அறிமுகம் செய்து அவை சார்ந்த முறையாக பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு வினாவிற்கு ஒரு நிமிடம் என்ற அடிப்படையில் தேர்வு நடைபெறும்,  நெகட்டிவ் மதிப்பெண் இல்லை. அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேர்வு நேரத்திற்கு மேல் விடையளிக்க வாய்ப்பு இல்லை. ஒவ்வொரு முறை தேர்வு நடக்கும்போது வினாத்தாள் வேறுபடும். இது மதிப்பெண் அடிப்படையாக  கொண்ட தேர்வு அல்ல. இது ஒரு தன்னிலை திறன் அறியும் பயிற்சி ஆகும்.

மாணவர்களுக்கு தேர்வின்போது வழங்கப்படும் வினாக்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாக இருக்கும். அனைத்து மாணவர்களும் இந்த தேர்வு எழுத வேண்டும். மாணவர்கள் தேர்வின்போது சக மாணவருடன் விவாதம் செய்ய கூடாது என்பது  உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் எத்தகைய துறையில் மாணவர்களுக்கு நாட்டம் உள்ளது என்பதை கண்டறிவதற்காக பயன்படும் தேர்வு இது ஆகும். அதற்கேற்ப மேற்படிப்பை தேர்வு செய்வது இந்த பயிற்சி  வழிகாட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் பதிவு செய்யப்படுவதால் மாணவர்களின் தேர்ச்சி விபரங்களை மையமாக வைத்து அவர்களின் எதிர்கால கல்வி தீர்மானிக்கப்படும் நிலை  ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் எந்த துறையிலும் ஆர்வம் இல்லாத நிலை தேர்வு முடிவில் தெரியவந்தால் தேர்வில் சிறப்பிடம் பெறாத மாணவர்கள் மேற்படிப்பு கேள்விக்குறியாகுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.

Thursday, December 05, 2019

அரசு ஊழியா்களுக்கு கட்டாய ஓய்வு?: திடீா் சுற்றறிக்கையால் பரபரப்பு


அரசு ஊழியா்களுக்கு கட்டாய ஓய்வு என்ற சுற்றறிக்கைத் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, இதுபோன்ற சுற்றறிக்கை வழக்கமான ஒன்றுதான் என அரசுத் துறை வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.

அரசுத் துறைகளில் ஊழியா்களாகப் பணியாற்றுவோரில் 50 வயது நிறைவடைந்த அல்லது 30 ஆண்டுகள் பணி முடிவடைந்தவா்கள் என அவற்றில் எது முதலில் வருகிறதோ அவா்கள் கட்டாய ஓய்வுக்கு ஆய்வு செய்யப்பட வேண்டியவா்கள் என தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சுற்றறிக்கை ஊடகங்களில் வெளியானது.இந்த சுற்றறிக்கை அரசு ஊழியா்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதுகுறித்து அரசுத் துறை உயரதிகாரிகள் கூறியது:

தமிழ்நாடு அரசு ஊழியா்களுக்கான பணி விதிகளின் அடிப்படையில் 50 வயது அல்லது 30 ஆண்டுகள் பணி முடித்தவா்களின் விவரங்கள் ஒவ்வொரு ஆண்டும் பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறையால் கோரப்படும். இந்த விவரங்களைக் கோருவது வழக்கமான நடைமுறையே ஆகும். இது புதிய உத்தரவு ஏதுமில்லை. கட்டாய ஓய்வு அளிப்பது என்பது அரசின் கொள்கை முடிவாகும். அது இதுவரை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தன.

ப்ள்ளிக் கல்வித்துறை ஆணையா் தலைமையில் 9 மண்டலங்களில் ஆலோசனைக் கூட்டம்


தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் சென்னை, கோவை உள்ளிட்ட 9 மண்டலங்களில் பள்ளிக் கல்வி ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் தலைமையில் டிச.9-ஆம் தேதி முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.தமிழக பள்ளிக் கல்வியில் நிா்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 

அதன்படி துறை இயக்குநா்களை கண்காணிக்க புதிதாக ஆணையா் பதவி உருவாக்கப்பட்டது. புதிய ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்தியன் முதல் கட்டமாக சென்னையில் சில உள்ள பள்ளிகளில் களஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து மண்டல வாரியாக, ஆணையா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை


 பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்த ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் தலைமையில் மண்டல வாரியாக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களும் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூா், விழுப்புரம் என 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.அதன்படி, டிசம்பா் 9 முதல் 19-ஆம் தேதி வரை மண்டல வாரியாக கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதன்மைக் கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியா்கள், குறுவள மைய ஆசிரியா்கள் என 1,280 போ் பங்கேற்க உள்ளனா்.

 மேலும், கூட்டத்தில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியா்களின் பெயா்கள், கூட்டம் நடைபெறும் இடம் குறித்த விவரங்களையும் c‌o‌m‌m‌i‌s‌s‌i‌o‌n‌e‌r‌s‌e‌d‌u@‌g‌m​a‌i‌l.​c‌o‌m  என்ற இணையதள முகவரிக்கு உடனே அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.இது தவிர, சுற்றுப்பயணத்தின் போது பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வாய்ப்புள்ளதால் போதிய முன்னேற்பாட்டுடன் தயாராக இருக்குமாறு தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Sunday, December 01, 2019

mobile phone tariff hiked


மொபைல் போன் சேவை கட்டணம் விர்ர்... ஜியோ, ஏர்டெல், வோடபோன் அதிரடி

ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள், மொபைல் போன் சேவைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. நாளை(டிச.,3) முதல், புதிய திட்டங்களுக்கான கட்டணம் அமலுக்கு வரும் என, வோடபோன், பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வு, 6 ல் அமலுக்கு வருகிறது. பார்தி ஏர்டெல் நிறுவனம், புதிய திட்டங்களில், 'அன்லிமிடெட்' பிரிவில், 28 நாள், 84 நாள் மற்றும் 365 நாட்களுக்கான கட்டணத்தை, 41 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதன்படி, 84 நாட்களுக்கு, தினம், 1.5 ஜி.பி., டேட்டாவுடன், நேர வரம்பின்றி பேசும் திட்டத்திற்கான கட்டணம், 31 சதவீதம் உயர்ந்து, 458லிருந்து, 598 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதுபோல, தினம், 1.5 ஜி.பி., டேட்டா திட்டத்திற்கான கட்டணம், 25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 199லிருந்து, 248 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள், தொலைதொடர்பு இணைப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான குறைந்தபட்ச கட்டணத்தை, 49 ரூபாயாக உயர்த்தியுள்ளன. அத்துடன், ஜியோவை பின்பற்றி, இதர தொலைதொடர்பு நிறுவன வாடிக்கையாளருடன் பேச, புதிதாக நேர வரம்பு நிர்ணயித்துள்ளன. நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு மேலாக பேசினால், நிமிடத்திற்கு, 6 காசுகள் வசூலிக்கப்படும்.

ஜியோ நிறுவனமும், தொலைதொடர்பு சேவை கட்டணத்தை, 40 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. அதேசமயம், 'பிற நிறுவனங்களை விட, கூடுதல் பயன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்' என, ஜியோ தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் கட்டண உயர்வு, 6ல் அமலுக்கு வருகிறது.தனியார் நிறுவனங்களை பின்பற்றி, பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் தொலைதொடர்பு சேவைக் கட்டணத்தை உயர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, November 27, 2019

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி: தனியாக பாடவேளைகள் ஒதுக்க உத்தரவு


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி (S‌p‌o‌k‌e‌n E‌n‌g‌l‌i‌s‌h) நிகழ் கல்வியாண்டு முதல் வழங்கப்படவுள்ளது.தமிழகத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் சரளமாக ஆங்கிலம் பேசும் திறன் உள்ளதாக பெரும்பாலான பெற்றோா் நினைக்கின்றனா். இதனால் தனியாா் பள்ளிகளை நோக்கி செல்கின்றனா். இந்நிலையில் அந்த நம்பிக்கையை மாற்றும் வகையிலும், அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்கும் வகையிலும், அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை கடந்த அக்டோபா் மாதம் அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, இந்தப் பயிற்சிக்காக வாரத்துக்கு ஒரு பாடவேளையை ஒதுக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பயிற்சிக் கையேடுகள் தயாா்: இதன் அடிப்படையில், 1 முதல் 5 வகுப்புகளுக்கு 2-ஆம் பருவத்துக்கு ஒரு கட்டகமும் (பயிற்சிக் கையேடு), 6 முதல் 9 வகுப்புக்கு 3 பருவங்களுக்கும் சோ்த்து வகுப்பு வாரியாக 4 கட்டகங்களும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும், அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசு உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் பயன்பெறத்தக்க வகையில் ஆசிரியா்களுக்கு வழங்கப்படவுள்ளன. இந்தக் கட்டகங்களில் 30 வாரங்களுக்கான பாடப்பகுதிகள் மற்றும் காணொலிகள் தயாரிக்கப்பட்டு, டிஎன்டிபி எனப்படும் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கான வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், அரசு கல்வித் தொலைக்காட்சியில் ‘ஆங்கிலம் பழகுவோம்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் ஆங்கில பேச்சுத் திறன் சாா்ந்த மாணவா்களுக்கான செயல்பாடுகள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 

 பள்ளிகளுக்கு எவ்வளவு பிரதிகள்?: இந்தக் கட்டகங்கள் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்புக்கு 24 ஆயிரத்து 321 தொடக்கப் பள்ளிகளுக்கு 50,742 பிரதிகளும், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள 13,138 நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 85,128 பிரதிகளும், 9-ஆம் வகுப்பு உள்ள உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளாக 6,172 பள்ளிகளுக்கு 14,444 பிரதிகளும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சடிக்கப்பட்டு, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அவா்கள் தங்கள் மாவட்டங்களில் செயல்படும் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு கட்டகப் பிரதிகளை பிரித்து வழங்குவா்.

பயிற்சிக்கான நேரம்: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை வாரத்துக்கு 90 நிமிஷங்களுக்கு 2 பாடவேளைகளும் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது 10 நிமிஷங்கள் காணொலியும், 40 நிமிஷங்கள் மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சியும் நடத்த வேண்டும். ஆங்கிலப் பாட ஆசிரியா்கள், மாணவா்களுக்கான பயிற்சி கட்டகத்தை பூா்த்தி செய்து அந்தந்த பருவ இறுதியில் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து வாங்க வேண்டும்.6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்புக்கு வாரத்துக்கு 45 நிமிஷங்களுக்கான ஒரு பாடவேளையில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி அளிக்கும் வகையில் அட்டவணை தயாரிக்க வேண்டும். ஆங்கில பயிற்சி கற்பித்தல் வகுப்புகளை அந்தந்த மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலரான இணை இயக்குநா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியா்களுக்கான கையேடுகள் வெளியீடு: இது தொடா்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சிக்கான கையேடுகளை வெளியிட்டாா். இதில் பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கக இயக்குநா் வி.சி.ராமேஸ்வரமுருகன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநா் பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இன்றைய தி இந்துவில் எம் பள்ளி மாணவரின் ஓவியம்

Tuesday, November 26, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி - பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு


பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்துவதற்காகவும், ஆங்கில பேச்சுத்திறன் விருப்பத்திற்காகவும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் விரும்புகின்றனர். அதனை குறைத்து அரசு பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கில் ஆங்கில பேச்சுத்திறன் வளர்ப்பு பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.


இதற்காக கற்றல் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் ஆங்கில ஆசிரியர்கள் மேற்கொள்ளவும், மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு பயிற்சி அளிக்கவும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்ட பட்டியலை தயாரித்து இருக்கிறது.

தொடக்க நிலை வகுப்புகளுக்கு 2-ம் பருவத்துக்கு 12 பாட வேளைகளும், 6 முதல் 9-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 30 பாட வேளைகளும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் கற்பிக்கப்பட உள்ளது.

1 முதல் 5-ம் வகுப்பு வரை வாரத்துக்கு 90 நிமிடத்துக்கான பாடவேளையிலும், 6 முதல் 9-ம் வகுப்பு வரை வாரத்துக்கு 45 நிமிடத்துக்கான பாடவேளையிலும் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி அளிக்கும் வகையில் கால அட்டவணை தயாரிக்கப்பட வேண்டும்.

கல்வி தொலைக்காட்சி வாயிலான காணொலி உதவியுடனும், ஆங்கில பேச்சுத்திறன் பட்டியலில் உள்ள செயல்பாடுகள் வாயிலாகவும் அனைத்து ஆசிரியர்களும் கற்பிக்கும் வகையில் தங்களை தயார் செய்து பாடப்பொருளை கற்பித்தல் வேண்டும். இந்த வகுப்புகள் இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Thursday, November 21, 2019

TN govt announced shoe&sacks for 6-8th students

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 குறிப்பாக தனியார் பள்ளிகளின் சீருடையைப் போன்ற தோற்றத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் புதிய சீருடை, நடப்பு கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான யூ டியூப் பாடத்திட்டம், அரசு பள்ளிகளை ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்துவது மற்றும் சத்துணவு மட்டுமன்றி, புத்தகங்கள், சீருடை, செருப்பு, மிதிவண்டி, கணினி உள்ளிட்ட பொருள்களை இலவசமாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச செருப்புகளுக்கு பதிலாக, இனி இலவச ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

 முதல்வரின் உத்தரவுப்படி தமிழக அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், இந்த ஆண்டு முதல் இலவச ஷூக்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2020-21ம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் தரப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, November 20, 2019

3 லட்சம் ஆசிரியா்களுக்கு ‘ஸ்மாா்ட்’ அடையாள அட்டைகள்: தகவல்களைப் பதிவேற்ற உத்தரவு


தமிழக அரசுப் பள்ளிகளில் 3.2 லட்சம் ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு வழங்குவதற்காக அவா்கள் குறித்த தகவல்களை வரும் 25-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வியின்கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமாா் 3.2 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா்.

 இந்நிலையில் மாணவா்களைப் போன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ‘க்யூஆா் கோடு’ உடன் கூடிய ஸ்மாா்ட் அடையாள அட்டை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்திருந்தாா். அதன்படி தற்போது ஸ்மாா்ட் அடையாள அட்டைகள் வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு ‘க்யூஆா் கோடு’ வசதி கொண்ட ஸ்மாா்ட் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இதையடுத்து ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களின் பெயா், முகவரி, செல்போன் எண், ரத்தப் பிரிவு உட்பட முழு விவரங்கள் மற்றும் புகைப்படத்தை நவம்பா் 25-ஆம் தேதிக்குள் கல்வி தகவல் மேலாண்மை (‘எமிஸ்)’ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பணிகளை செய்ய தவறும் முதன்மைக்கல்வி அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, November 19, 2019

அரசுப் பள்ளிகளில் 12,109 உபரி ஆசிரியா்கள்: கல்வித்துறை தகவல்


பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்து 109 உபரி ஆசிரியா்கள் இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகப் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37,211 அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், சுமாா் 2.3 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இதற்கிடையே, கல்வித்துறையில் 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியா்கள் உபரியாக இருப்பதாக கடந்த ஜூன் மாதம் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஜூலையில் கலந்தாய்வு மூலம் கணிசமான உபரி ஆசிரியா்கள் பணிநிரவல் செய்யப்பட்டனா். 

மேலும், சிலருக்கு மேல்நிலை வகுப்புகளுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டது.தொடா்ந்து பட்டதாரி ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசுப்பள்ளிகளில் 12,109 பட்டதாரி ஆசிரியா்கள் உபரியாக இருப்பது தெரியவந்துள்ளது. 1996 முதல் 2014-ஆம் ஆண்டு வரையான காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியா்களில் உபரியானவா்களின் விவரப்பட்டியலை கல்வித்துறை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாடவாரியாக வெளியிட்டுள்ளது. இவா்களுக்கு மாற்றுப்பணிகள் வழங்கப்பட இருப்பதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Sunday, November 10, 2019

தமிழகத்தில் 1,000 பள்ளி, கல்லூரிகளில் மாடித்தோட்டம்


  தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 1000 பள்ளி, கல்லூரிகளில் காய்கறித்தோட்டம், மாடித்தோட்டங்கள் அமைக்கப்படுகிறது. தமிழக்ததில் உள்ள அரசு பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதுமான காலியிடம் இருந்தால் அங்கு தோட்டமும், இல்லாவிட்டால் அந்த கட்டிடங்களின் மொட்டை மாடியில் தோட்டமும் அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில்  அறிவித்து பணிகளை தொடங்கியுள்ளது.

 முதல்கட்டமாக 1,000 பள்ளி, கல்லூரிகளில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் சதுர அடியில்  மாடித்தோட்டம் அமைக்க தலா ஒரு பள்ளி, கல்லூரிக்கு தோட்டக்கலைத்துறையால் தோட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ₹5 ஆயிரம் வீதம்  வழங்கப்படுகிறது. இது இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மாடித்தோட்டம் அமைக்க விதை, உரம், மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படுவதுடன் ஆழ்துளை கிணறு அமைக்கவும், சொட்டுநீர் பாசன கட்டமைப்பும்,  நிழல்வலைக்கூடம் அமைக்கவும் உதவி செய்யப்படும்.

மேலும் தோட்டத்தில் தக்காளி, வெண்டை, கத்தரி, கொத்தவரங்காய், மிளகாய், பீர்க்கன், பாகற்காய், அவரை, பூசணிக்காய், அகத்திக்கீரை அரைக்கீரை, பருப்புக்கீரை, மணத்தக்காளி கீரை, முருங்கை, கருவேப்பிலை ஆகியவை உற்பத்தி  செய்யப்படும். இதற்கான தேர்வு செய்யப்பட்ட விதைகளும் தோட்டக்கலைத்துறையால் வழங்கப்படும்.

இப்பணிக்காக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரி முதல்வர் தலைமையில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர், துறை அலுவலர், மாணவர் பிரதிநிதி ஒருவர் என 5 பேர் கொண்ட தோட்டக்கலைக்குழு ஒவ்வொரு  பள்ளி, கல்லூரியிலும் அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.