இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, June 30, 2013

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (திங்கட்கிழமை) கடைசி நாளாகும்.

ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாய கல்வி சட்டத்தின் படி இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக் கான தகுதித்தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அதுபோல் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 17, 18ந் தேதிகளில் தேர்வு நடக்கிறது. இதற்கான அறிவிப்பை ஆசி ரியர் தேர்வு வாரியம் வெளி யிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 17ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வினி யோக்கிக்கப்பட்டு வருகிறது.

பூர்த்தி செய்த விண்ணப்பங் களை இன்று(திங்கட்கிழமை) மாலை 5½ மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இன்று கடைசி நாள் திருப்பூர் மாவட்டத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங் களை பெறுவதற்காக திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண் கள் மேல்நிலைப்பள்ளியில் மட்டுமே மையம் அமைக்கப் பட்டுள்ளது. இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்துக்கும் குறைவான விண்ணப்பங்களே பூர்த்தி செய்யப்பட்டு ஒப்படைக்கப் பட்டு உள்ளன. இதனால் கடைசி நாளான இன்று (திங்கட்கிழமை) ஆயி ரக்கணக்கானோர் விண்ணப் பங்களை சமர்ப்பிக்க வருவார் கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது. எனவே கூட்டம் அதிக மாக இருந்தால் கூடுதலாக மையங் கள் திறக்கப்பட்டு, விண்ணப் பங்கள் வாங்கப்படும் என்று மாவட்ட கல்வி அதிகாரி ஜெயலட்சுமி தெரிவித்தார்.

No comments:

Post a Comment