இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, June 30, 2017

நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் அதிரடி உயர்வு!


சுயநிதி கல்லூரிகளுக்கான பொறியியல் படிப்புகளின் கல்வி கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கான கட்டணத்தை 2012-ம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தி கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது. அதன்படி சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான தரச்சான்று அல்லாத பாடப்பிரிவுக்கு கட்டணம், ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தரச்சான்று அல்லாத நிர்வாக ஒதுக்கீட்டுக்கான பாடப்பிரிவு கட்டணம், ரூ.70 ஆயிரத்திலிருந்து ரூ.85 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தரச்சான்று பெற்ற நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ.87 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி கட்டண உயர்வு தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கானது மட்டும் எனவும் கல்வி கட்டண நிர்ணய குழு தெரிவித்துள்ளது.

அரசு பள்ளிகளுக்கு கழிப்பிடம் கட்டி தந்தால் புதிய பள்ளி தொடங்க அனுமதி


தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டம், ஓரியண்டல் பாடத்திட்டம், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம் என நான்கு பாடத்திட்டங்களின் கீழ் பள்ளிகள் இயங்கி வந்தன. இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு மேற்கண்ட பாடத்திட்ட முறைகள் கலைக்கப்பட்டு பொதுப் பள்ளி முறையை அரசு கொண்டு வந்தது. அதற்கு பிறகு அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில், அரசுப் பள்ளிகள் தவிர தனியார் பள்ளிகள் இயங்குவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. அங்கீகாரம் பெறுவதற்கு 5 துறைகளிடம் இருந்து சான்று பெற வேண்டும் என்றும் அரசு தெரிவித்துவிட்டது. மேலும், தனியார் பள்ளிகள் தமிழை முதன்மைப் பாடமாக நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால், தமிழ் மொழியைப் படிக்க விரும்பாத பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக்கல்வி நடத்தும் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பெரிய அளவில் மவுசு கூடத் தொடங்கிவிட்டது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் போது தமிழை படிக்காமலேயே உயர் கல்விக்கு சென்றுவிட முடியும் என்ற நிலை நீடிக்கிறது. இதனால் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் புதிய பள்ளிகள் தொடங்க விரும்புவோர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளை தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் ஆண்டுக்கு சுமார் 50 பள்ளிகள் தொடங்க விண்ணப்பங்கள் மத்திய அரசுக்கு வருகிறது. இருப்பினும், மாநில அரசுகள் பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்றுகள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது. இதை தொடர்ந்து, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககத்திடம் தடையில்லா சான்று கேட்டு தனியார் விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த காலங்களில் புதிய பள்ளிகள் தொடங்க 20 லட்சம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது அந்த அளவுக்கு செலவு செய்ய வேண்டியதில்லை என்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

இதனால் புதிய பள்ளிகள் தொடங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த ஆண்டு சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க 50 பேர், தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதற்கும் தேதி மாலை வரை கடைசி நாளாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த கடைசி தேதி ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ஆண்டு நீட்டிக்கப்படுமா என்று தனியார் எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையே, அரசுப் பள்ளிகளில் தனியார் பங்களிப்புடன் கழிப்பிடம் கட்டித் தரப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். தனியார் பங்களிப்பு எப்படி அரசுப் பள்ளிக்கு பொருந்தும் என்று பலர் எதிர்பார்த்து இருந்த நிலையில், தற்போது அதற்கு விளக்கம் கிடைத்துள்ளது. அதாவது, புதிதாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தொடங்கவும், சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று பெறவும் விண்ணப்பித்தவர்கள் அரசுப் பள்ளிகளில் கழிப்பிடம் கட்டித் தருதல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும் என்று மெட்ரிக்குலேஷன் இயக்ககம் கேட்கிறது.

அமைச்சரின் ஆலோசனையின் பேரில் அதை ஒரு விதியாகவும் வைத்துள்ளது. அதனால் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சிலர் கழிப்பிடம் கட்டித்தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். ஏற்காதவர்களுக்கு தடையில்லா சான்று கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய மாற்று குழுவின் பதவிக்காலம் 3 மாதம் நீட்டிப்பு


மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க அலுவலர் குழு ஒன்றை முதல்வர் எடப்பாடி கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி அறிவித்தார்.

அந்த குழுவில், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர், பி.உமாநாத் உறுப்பினர் செயலாளர் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இந்த குழுவினர், மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க ஜூன் 30ம் தேதிக்குள் (நேற்று) அரசுக்கு அளிக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, அந்த குழுவினர் கடந்த மாதம், அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆனால், திட்டமிட்டபடி தமிழக அரசுக்கு இந்த குழுவினர் நேற்று அறிக்கை அளிக்கவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க அலுவலர் குழுவுக்கு மேலும் 3 மாதம், அதாவது செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் அளித்து தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் சண்முகம் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

18 முதல் 20 வயது வரை உள்ள இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று முதல் 30ம் தேதி வரை சிறப்பு முகாம்


தமிழகத்தில் 18 முதல் 20 வயது வரை உள்ள இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 1,500 கல்லூரிகளில் இன்று முதல் 30ம் தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதும் 18 வயது முதல் 20 வயது வரை உள்ள இளைஞர்கள் அதிக அளவில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை.

இதை கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம், இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நாடு முழுவதும் ஒரு மாதம் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் வருகிற 30ம் தேதி வரை இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 1,500 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நேரடியாக சென்று ஒவ்வொரு கல்லூரியிலும் 5 பேருக்கு ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் விண்ணப்பம் செய்வது எப்படி என்று பயிற்சி அளிப்பார்கள்.

அதேபோல், தமிழகம் முழுவதும் இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான இரண்டு நாள் சிறப்பு முகாம் ஜூலை 9 மற்றும் 23ம் தேதி (ஞாயிறுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு நாளை தேர்வு : கைக்குட்டை எடுத்து செல்ல தடை


தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நாளை போட்டி தேர்வு நடக்கிறது. மொத்தம், 2.19 லட்சம் பேர் பங்கேற்கும் இத்தேர்வுக்கு, கைக்குட்டை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - ௧ பதவியில், 1,663 இடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம் போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்வு, தமிழகம் முழுவதும், 601 மையங்களில் நாளை நடக்கிறது. மொத்தம், 2.19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சென்னையில், 41 மையங்களில், 15 ஆயிரத்து, 105 பேர் பங்கேற்கின்றனர். காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கும். தேர்வர்கள், காலை, 9:00 மணிக்கே, தேர்வு மையங்களுக்குள் செல்ல வேண்டும்; அதற்கு மேல் அனுமதி கிடையாது. தேர்வறைக்குள், இரண்டு, 'பால் பாய்ண்ட்' பேனா, ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி உண்டு.

தேர்வு மையத்திற்குள் வரும் தேர்வர்களை, கல்வித்துறை பணியாளர்களும், போலீசாரும் சோதனையிடுவர். சோதனை முடித்து, 9:30 மணி முதல் தேர்வு துவங்கும் வரை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான காத்திருப்பு அறையில் இருக்க வேண்டும். தேர்வர்கள், கணினி, கால்குலேட்டர், மொபைல்போன், மின்னணு கடிகாரம், கைக்குட்டை உட்பட எந்த பொருளையும், தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. ஹால் டிக்கெட்டில் புகைப்படம் இல்லாதோர், ஒரு பாஸ்போர்ட் மற்றும் தபால்தலை அளவு புகைப்படம் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், பிற்சேர்க்கை படிவம் - 8-ஐ, www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றொப்பம் பெற்று எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு


தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, ௧,௬௬௩ முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - ௧ இடங்களை நிரப்ப, நாளை, தமிழகம் முழுவதும் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியான பின், கூடுதல் காலி பணியிடங்களில் ஆட்களை நியமிக்க, அரசு அனுமதி அளித்தது. இதற்கான அரசாணை, நேற்று முன்தினம் வெளியானது. இதை தொடர்ந்து, நாளை நடக்கவுள்ள போட்டி தேர்வு மூலம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, ௧,௬௬௩ இடங்களுடன், கூடுதலாக, ௧,௭௧௨ இடங்கள் சேர்த்து, ௩,௩௭௫ பணியிடங்கள் நிரப்பப்படும் என, டி.ஆர்.பி., பொறுப்பு தலைவர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) - 2017 - Please click here for Examination Results and Final Key Answers

Click below

http://trb.tn.nic.in/TET2017/30062017/msg1.htm

1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு."


Thursday, June 29, 2017

பி.எட் விண்ணப்பம் பெற இன்று கடைசி நாள்


தமிழகம் முழுவதும் இரண்டு ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள 1777 இடங்களுக்கான ஒற்றை சாளர முறையிலான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 2017-18 நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப விற்பனை ஜூன் 21ம் தேதி தொடங்கியது. அதில் 5737 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விண்ணப்ப விற்பனை இன்று நிறைவடைகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 3ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கைக்காக சமர்பிக்க வேண்டும். இதுதொடர்பான செயல் வழிமுறைகள் www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிப்போகிறது? ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு


தமிழ்நாட்டில் 584 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சேருவதற்கு 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. இவர்களுக்கு ரேண்டம் எண்ணும், ரேங்க் பட்டியலும் வெளியிடப்பட்டன.

கலந்தாய்வு கடந்த 27-ந் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் தொடங்கவில்லை. சில மாணவர்கள் மருத்துவம், என்ஜினீயரிங் என இரண்டு படிப்புகளுக்கும் விண்ணப்பித்து உள்ளனர். மருத்துவத்தில் இடம் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் என்ஜினீயரிங் சேருவார்கள். எனவே எப்போதுமே மருத்துவ கலந்தாய்வு தொடங்கிய பின்னர்தான் என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 17-ந் தேதி தொடங்குகிறது. கடந்த வருடம் மருத்துவ கலந்தாய்வுக்கும், என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கும் இடையே ஒரு வாரம் இடைவெளி இருந்தது. எனவே இந்த ஆண்டு என்ஜினீயரிங் கலந்தாய்வு, ஜூலை மாதம் 3-வது வாரம் இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு விரைவில் வருகிறது. என்ஜினீயரிங் கலந்தாய்வு எப்படியும் 28 நாட்களாவது நடக்கும். எனவே என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் தாமதமாக தொடங்கினால் அதற்கான அனுமதியை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலில்(ஏ.ஐ.சி.டி.இ.) பெறப்படும். இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நிரந்தரம் கேட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாற்றம்


மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள், பகுதி நேரமாக நியமிக்கப்பட்டனர். இவர்களில், 1,380பேர் ராஜினாமா செய்துள்ளனர்; மீதமுள்ள, 15 ஆயிரத்து, 169 பேருக்கு, ஐந்து ஆண்டுகளாக, மாதம், 7,000ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர்கள், ஓவியம், இசை, கம்ப்யூட்டர் சயின்ஸ், தோட்டக்கலை என, பல்வேறு பாடப்பிரிவுகளில், வகுப்புகள் நடத்துகின்றனர். இவர்களில் பலர், முதுநிலை படிப்பு, ஆராய்ச்சி படிப்புகளை முடித்து, பேராசிரியர் பணிக்கும் தகுதியாக உள்ளனர். பலர், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதித் தேர்வும் முடித்துள்ளனர். இந்நிலையில், தங்களின் கல்வி தகுதிக்கேற்ப, ஆசிரியர் பணியில் நிரந்தரமாக நியமிக்குமாறு, பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். அவர்களிடம், அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு நடத்தி, விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

ஆனால், தற்போது பணி நிரந்தரம் கேட்கும் ஆசிரியர்களை, உடனடியாக இட மாற்றம் செய்யுமாறு, எஸ்.எஸ்.ஏ.,வுக்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதனால், 101 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள், முதற்கட்டமாக இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பட்டியலை தயாரிக்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கு, எஸ்.எஸ்.ஏ., உத்தரவிட்டுள்ளது.

ஊதியக்குழு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு..


தமிழ் பல்கலை கழக அறிவிப்பு

Wednesday, June 28, 2017

ஆகஸ்ட் 1-இல் ரயில் கட்டண உயர்வு அறிவிப்பு: செப்டம்பர் முதல் அமலாகும்


ரயில் கட்டண உயர்வு ஆகஸ்ட் முதல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாகவும் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி மூலம் ஏற்கெனவே கணிசமான அளவில் பயணிகள் கட்டணம் உயரும் நிலையில், மேலும் பயணிகள் கட்டணம் அதிகரிக்கும் என்ற செய்தி பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு ஒப்புதல்: இந்திய மக்களில் அதிகமானோர் பயன்படுத்தும் பொது போக்குவரத்து சேவையாக ரயில்வே திகழ்ந்து வருகிறது. நாட்டில் உள்ள பிற போக்குவரத்து கட்டணங்களைக் காட்டிலும் ரயில்வே பயணக் கட்டணம் குறைவு என்பதும் இதற்கு ஒரு காரணமாகும். இந்தச் சூழலில் பல்வேறு அமைச்சகங்களுடன் பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஏப்ரல் மாதம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, ரயில்வேயின் நிதி நிலைமை, உள்கட்டுமானம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள பயணிகள் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இப்போது இதற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ரயில் கட்டண உயர்வு குறித்து ஆகஸ்ட் முதல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். செலுவுகளை சமாளிக்க...: எரிபொருள் செலவு, ஊழியர் சம்பளம் என ரயில்வேக்கு ஒவ்வொரு ஆண்டும் செலவு அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில்தான், இழப்புகள் மற்றும் செலவுகளைச் சமாளிப்பது குறித்து கடந்த ஏப்ரலில் ரயில்வே தரப்பில் ஆய்வறிக்கை ஒன்று மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில், கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் சமூக சேவைகளுக்காக மட்டும் ரயில்வேக்கு ரூ.27 ஆயிரம் கோடி வரை செலவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே செலவுகள் மற்றும் இழப்புகளைச் சமாளிக்கும் வகையில் விரைவில் ரயில்வே பயணக் கட்டணம் உயர்த்தப்படும். எவ்வளவு உயரும் ?: இப்போதைய சூழ்நிலையில் படுக்கை வசதிகொண்ட பெட்டிகளில் குறைந்தபட்ச கட்டண உயர்வை மட்டுமே மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், ஏசி மூன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, முதல் வகுப்பு ஆகியவற்றில் பெருமளவு கட்டணத்தை உயர்த்த ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது. பயமுறுத்தும் ஜிஎஸ்டி: ஜூலை 1 முதல் சேவை வரிக்கு மாற்றாக ஜிஎஸ்டி வரி அமலாகவுள்ளது. இதனால், குளிர்சாதன ரயில் பயணத்துக்கு 5 சதவீதம் வரை கட்டணம் உயருகிறது. இந்தக் கட்டண உயர்வு, ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்பு முன்பதிவு செய்தவர்களுக்கு பொருந்தாது என்று ரயில்வே வாரியம் தெரிவிக்கிறது.

மேலும் குளிர் சாதன மற்றும் முதல் வகுப்பு பயணிகள் ஜூலை 1 முதல், இருவழிக்கான பயணச்சீட்டை ஒரே பயணச்சீட்டாக பெற முடியாது. ஜிஎஸ்டி க்கான வரைமுறைபடுத்துதல் காரணமாக செல்வதற்கு தனி பயணச்சீட்டு, திரும்பி வருவதற்கு தனி பயணச்சீட்டு என தனித்தனியாகத்தான் வழங்கப்படும். புறநகர் பயணிகள், இருவழிப் பயணச்சீட்டை பெற வேண்டுமானால், பயணம் தொடங்கும் இடம் மற்றும் போய் சேரும் இடம் இரண்டும் ஒரே மாநிலத்தில் இருக்க வேண்டும். ஒரு சில மண்டல ரயில்வேகள், பயணத்தை தொடங்கிய இடத்திலேயே பயணத்தை முடிக்கும் ஆன்மீக பயணம் அல்லது சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளுக்கு டெலஸ்கோப் கட்டணம் அடிப்படையில் சலுகை அளிக்கப்பட்டு வந்தது. ஜூலை 1 முதல் இந்த நடைமுறையும் ரத்து செய்யப்படுகிறது.

தொடக்கக்கல்வி செயல்முறைகள் - அனைத்து மாவட்டகளில் உள்ள அரசு/ ஊராட்சி ஒன்றிய ஆரம்ப / நடுநிலைப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு சார்ந்த விவரங்கள் கேட்டு செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

Tuesday, June 27, 2017

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு BEd ஊக்க ஊதியம் வழங்குவது குறித்த அனைத்து ஆவணங்களின் தொகுப்பு

Click below

https://drive.google.com/file/d/0B1UIhFGlSa3QSFV2QlJhbEF4eW8/view?usp=drivesdk

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதை கட்டாயமாக்காதது ஏன்?


அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியிலே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயமாக்காதது ஏனென்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தஞ்சை மாவட்டம், பந்தநல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்தாண்டு ஜூன் 14 }ஆம் தேதி அரசு வெளியிட்ட உத்தரவில், அரசு பள்ளிகளில் மட்டுமே ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி என்று குறிப்பிட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடத்தைத் தொடங்க மறுப்பது பாரபட்சமானது. அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்ட ஆங்கில வழி வகுப்புகளை, தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுடன் ஒன்றாக அமரவைத்து, தமிழ் பாடம் நடத்தும் ஆசிரியர்களே நடத்துகின்றனர் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:

கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்கள் மட்டும் ஏன் முன்னேறுகின்றன?

கிராமப்புறங்களில் தரமான கல்வியின்மையே இதற்கு முக்கிய காரணமாகும். இந்தியா கிராமங்களால் வாழ்கிறது. ஆனால், கல்வியில் கிராமப்புற மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இதன் காரணமாகத்தான் கிராமப்புறங்களில் உள்ள பெற்úôரும் தங்களது குழந்தைகளை நகர்ப்புறங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி பயில்வதற்கு அனுப்புகின்றனர். தமிழ் வழி ஆசிரியர்களே ஆங்கில வழி பாடத்தை நடத்துவதால், ஆங்கில வழி வகுப்புகளுக்கு அனுமதி வழங்கியதில் எந்தவித பயனும் இல்லை. பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது பணிக்கு சரியான நேரத்தில் வருவதில்லை. ஏனெனில் அவர்கள் வெளியில் உள்ள வியாபாரரீதியான பணிகளில் கவனம் செலுத்துவதால் தான். இவ்வாறு தொடர்ந்தால், கிராமப்புற மாணவர்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது.

ஆசிரியர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதை கட்டாயமாக்காதது ஏன்"?: மேலும், அரசு பள்ளி ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிகளை திறக்காதது, முறையாக வகுப்புகளை நடத்தாதது, ஆசிரியர் பணி அல்லாமல் பகுதி நேர தொழில் செய்வது போன்ற நடவடிக்கைகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக தெரிவித்த நீதிபதி என்.கிருபாகரன், ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினால் ஒழிய நமது எதிர்காலம் பிரகாசமாக இருக்காது எனக் கூறி, 20 கேள்விகளுக்கு அரசு ஜூலை 14 }ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியிலே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயமாக்காதது ஏன் ? 2012 }க்கு பிறகு எத்தனை பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன? அதில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்? தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ? ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா ? அரசு பள்ளியை விடுத்து பெற்றோர்கள் தனியார் பள்ளிகள் நாடுவதற்கு காரணம் என்ன ? குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ? அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடங்குவதை ஏன் தடை செய்யக் கூடாது ? பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது? என்பன உள்ளிட்ட கேள்விகளை நீதிபதி என்.கிருபாகரன் எழுப்பினார்.