இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, January 31, 2019

5, 8 வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்ச்சி: சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியீடு


ஐந்து, எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்து அதற்கான சட்டத் திருத்தத்தை அண்மையில் கொண்டுவந்தது.

இந்த திருத்தச் சட்டம் இப்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகக் கூறிவந்தது. இது குறித்த அறிவிப்பையும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இந்த நடைமுறையால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும், பெரும்பாலான குழந்தைகள் கல்வியைப் பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கருத்துத் தெரிவித்திருந்தன. அதே நேரத்தில் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை நடைமுறையில் கொண்டுள்ள தமிழகம், இந்த புதிய மாற்றத்தை மேற்கொள்ளக்கூடாது எனவும், 8-ஆம் வகுப்பு வரையில் இலவசக் கல்வி அளிக்க வேண்டும் எனவும் கூறிவந்தது. இருப்பினும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், 8-ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தேர்ச்சி பெறச் செய்வதினால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது.

அதனால், 8 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு கட்டாயம் வைக்க வேண்டும் என தொடர்ந்து கூறிவந்தார். இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் இத்தகவல் வெளியாகியுள்ளது. அதில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியான இரண்டு மாதங்களில் உடனடித் தேர்வு நடத்தவேண்டும்.

அதிலும் மாணவர் தோல்வியடைந்தால் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுமதிக்காமல், 5 அல்லது 8-ஆம் வகுப்பிலேயே மீண்டும் தொடர அனுமதிக்கவேண்டும். அதே நேரம், ஒரு மாணவர் தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, எந்தக் காரணம் கொண்டும் அவரை பள்ளியைவிட்டு வெளியில் அனுப்பக் கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு பிப்.4-இல் ஊதியம்


ஜாக்டோ ஜியோ போராட்டம் எதிரொலியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் பிப்.4-ஆம் தேதி வழங்கப்படவுள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கருவூலத் துறையிலிருந்து வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட சம்பளப் பட்டியல் திரும்பப் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு அவர்கள் வேலைக்கு வராத நாள்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு, திருத்தப்பட்ட சம்பளப் பட்டியல் வங்கிகளுக்கு அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஈடுபடாதவர்கள் என அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் அனைவருக்கும் ஜனவரி மாத ஊதியத்தை 31-ஆம் தேதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. திருத்தப்பட்ட சம்பளப் பட்டியல் அனுப்பப்பட்டு அனைத்து ஊழியர்களுக்கும் ஜனவரி மாதத்துக்கான சம்பளம் பிப்.4-ஆம் தேதி வழங்கப்படும்.

Tuesday, January 22, 2019

பி.எப்., வட்டி அரசு அறிவிப்பு


வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, 8 சதவீதமாக தொடரும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும், பி.எப்., என்ற, வருங்கால வைப்பு நிதிக்கு, ஜன., 1 முதல், மார்ச், 31 வரையிலான காலத்திற்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதை பின்பற்றி, தமிழகத்திலும், வருங்கால வைப்பு நிதிக்கு, 8 சதவீதம் வட்டி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, 2018 அக்., 1 முதல், டிச., 31 வரையிலான காலத்திற்கு, 8 சதவீத வட்டி வழங்கப்பட்டது.

Monday, January 21, 2019

பதிவுமூப்பு ஆசிரியர்கள் 30ல் உண்ணாவிரதம்


வரும், 30ம் தேதி முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்' என, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.சங்கத்தின் பொதுச்செயலர், ராபர்ட் வெளியிட்ட அறிக்கை:இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை ஊதிய முரண்பாடுகளை நீக்கக்கோரி, பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில், எங்களின் நியாயமான கோரிக்கையை, அரசு ஏற்காமல் உள்ளது.

எங்கள் போராட்டத்தின் போது, மூன்று முறை, அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 10 ஆண்டுகளாக, அரசு தரப்பு ஏமாற்றுகிறது. எனவே, 30ம் தேதி முதல், சென்னை, தேனாம்பேட்டை, டி.பி.ஐ., கல்வி வளாகத்தில், காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து உள்ளோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, January 20, 2019

கோரிக்கை

பேச்சுவார்த்தை மூலம் அரசு தீர்வுகாண வேண்டும்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டத்துக்கு தமிழக அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த கூட்டமைப்பின் நிறுவனர் அருணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  

கடந்த 1.1.2004 முதல் பழைய ஓய்வூதியத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஊதியத்தை மத்திய அரசுகொண்டுவந்தது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
புதிய பங்களிப்பு ஊதியத்தை பங்குச் சந்தையில் செலுத்தும் போது, பங்குச் சந்தைலாபம் ஈட்டினால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட தொகையானது கிடைக்கும்.  பங்குசந்தை நஷ்டத்தில் சென்றால் எங்களின் நிலை என்னவாகும் என்பதைஅரசு புரிந்து கொள்ள வேண்டும். 

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு மற்றும் அனைத்து துறை ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய பல கோரிக்கைகள் வைத்தும் போராடியும் அரசு செவிசாய்க்க மறுக்கிறது. மாறாக அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் நசுக்க நினைத்து, பிரிவு 56- ஐ பயன்படுத்தி, அரசு உத்தரவை நடைமுறைப்படுத்தி ஆள்குறைப்பு செய்து வருங்கால சந்ததியினரின் வேலைவாய்பை கேள்விக்குறியாக்கி விட்டது.

மேலும் அங்கன்வாடி மையங்களை மூடி, தொடக்க நடுநிலைப்பள்ளிகளோடு அவற்றை இணைத்து பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பவும், இடைநிலை ஆசிரியர்களை தகுதி இழக்க செய்து அங்கன்வாடி மையங்களுக்கு அவர்களை பணியமர்த்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

ஒட்டுமொத்தமாக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை பாதிக்கும் செயல்பாடுகளை விடுத்து உடனடியாக அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து, கோரிக்கைகளை நிறைவேற்றி, நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தப்  போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அப்படி அழைத்து பேசி தீர்வு காணா விட்டால்   செவ்வாய்க்கிழமை முதல் ஜாக்டோ ஜியோ நடத்தும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு ஆதரவளித்து அதில் பங்கு பெறும் என அதில் கூறியுள்ளார்.

Friday, January 18, 2019

பள்ளி மாணவர்களுக்கு கலையருவி போட்டி


அரசு பள்ளிகளில், வரும், 22ம் தேதி, கலையருவி போட்டிகள் நடத்துமாறு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இந்திய கலை மற்றும் பண்பாட்டை மாணவர்கள் அறியும் வகையில், மத்திய மனித வள அமைச்சகம் சார்பில், 'கலா உத்சவ்' நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில், பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.

அதேபோல், தமிழகத்திலும், இரண்டாம் ஆண்டாக, வரும், 22 முதல், கலையருவி போட்டிகள் நடத்த, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 22ல், பள்ளி அளவிலான போட்டி; 24ல், கல்வி மாவட்ட போட்டி; 28ம் தேதி, வருவாய் மாவட்ட போட்டிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதில், தேர்வாகும் மாணவர்கள், மாநில போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஓவியம் வரைதல், பேச்சு, கட்டுரை, வண்ணம் தீட்டுதல், மெல்லிசை, குழு நடனம் உட்பட, 21 வகை போட்டிகள் நடத்தப்பட உள்ளன.ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 25 வகை போட்டிகள் நடத்தப்படுகின்றன

Thursday, January 17, 2019

தமிழக கிராமப்புற 5-ம்வகுப்பு மாணவர்கள் 59 சதவீதம் பேருக்கு 2-ம் வகுப்பு பாடத்தை படிக்க இயலவில்லை: ஆய்வில் தகவல்


தமிழகத்தில் கிராமப்புறங்களில் 5-ம் வகுப்பு பயிலும் 59 சதவீதம் மாணவர்கள், 3-ம் வகுப்பு பயிலும் 89 சதவீத மாணவர்கள் 2-ம் வகுப்பு பாடப் புத்தகங்களை படிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள் என்று ஆண்டு கல்வி அறிக்கை 2018-ல்(ஏஎஸ்இஆர்) தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக எடுக்கப்பட்ட அறிக்கையில், திருவள்ளூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கிராமப்புறங்களில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 50 சதவீதம் பேர் 2-ம் வகுப்பு பாடங்களைப் படிக்க சிரமப்படுகின்றனர். 2-ம் வகுப்பு பிலும் 96 சதவீத மாணவ, மாணவிகள் தங்களுக்கு உரிய பாடங்களை தெளிவாகப் படிக்க முடியாமல் இருக்கிறார்கள்.

பிரதம் கல்வி அமைப்பு சார்பில் ஆண்டு கல்வி அறிக்கை 2018 தயார் செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 20 ஆயிரத்து 435 மாணவர்களிடம்  படிக்கும் திறன், கணிதப்பாடங்களில் கணக்குளை தீர்வு செய்யும் திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வு குறித்து பிரதம் கல்வி அமைப்பின் மாநிலத் தலைவர் டி. ஆலிவர் கூறியதாவது:

''தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தொடர்ந்து ஆண்டுக்கு ஆண்டு மாணவர்கள் மத்தியில் சாதகமான முன்னேற்றம் பள்ளிக்கூடத்துக்கு தவறாமல் வருவதில் காணப்படுகிறது. தமிழக பள்ளிக்கூடங்களில் உள்ள வசதிகள் தேசிய அளவில் வகுக்கப்பட்டு மாணவர்களுக்கான சராசரி வசதிகளைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கிறது.

கடந்த 2010-ம் ஆண்டில் 10 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்திய நிலையில், 2018-ம் ஆண்டில் இது 2.3 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இது தேசிய அளவில் 15 முதல் 16 வயதுடைய பருவத்தினர் 13 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பைக் கைவிடுகின்றனர்.

இந்த ஆய்வின் முடிவில், ஒட்டுமொத்தமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி கற்றலின் திறன் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் 5-ம் வகுப்பு பயிலும் 59 சதவீதம் மாணவர்கள், 3-ம் வகுப்பு பயிலும் 89 சதவீத மாணவர்கள் 2-ம் வகுப்பு பாடப்புத்தகங்களைப் படிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிக்கூடம் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வாசிக்கும், கணிதம் போடும் திறன் மாறுபட்டு அமைந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களில் 72.9 சதவீதம் பேருக்கு 5-ம் வகுப்பு கணிதத்தில் வகுத்தல் கணக்குகளைச் செய்ய முடியவில்லை. இந்த அளவீடு தனியார் பள்ளிகளில் அதிகமாக இருக்கிறது. தனியார் பள்ளிகளில் 77 சதவீத மாணவர்களால் கணிதத்தைச் செய்ய முடியவில்லை.

அரசுப் பள்ளிகளில் பயிலும் 5-ம் வகுப்பு மாணவர்களில் 53.7 சதவீதம் பேருக்கு 2-ம் வகுப்பு பாடங்களை வாசிக்க முடியவில்லை. இது தனியார் பள்ளிக்கூடங்களில் 71.2 சதவீதமாக இருக்கிறது''.

இவ்வாறு ஆலிவர் தெரிவித்தார்.

சமகல்வி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்துராஜ் கூறுகையில், ''செயல்பாட்டு முறையிலான கற்றலின் முறையைப் பள்ளிக் கல்வித்துறை ஊக்குவிப்பது நல்ல விஷயம். ஆனால், இதை அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். பாடப்புத்தங்களைக் தவிர்த்து, பல்வேறு வெளிவிஷயங்களில் இருந்து மாணவர்களுக்கு சில பள்ளிகள் கற்றுத் தருகிறார்கள்'' எனத் தெரிவித்தார்.

Wednesday, January 16, 2019

ஓய்வுபெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்


கல்வியாண்டின் நடுவில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் சாந்தி தாக்கல் செய்த மனுவில், நான் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள திருவள்ளுவர் நடுநிலைப் பள்ளியில் கடந்த 1973-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். கடந்த 32 ஆண்டுகளாக பணியாற்றிய பின் கடந்த 2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றேன்.

இதனையடுத்து 2005-2006 கல்வி ஆண்டு முழுவதும் அதாவது 2006-ஆம் ஆண்டு மே மாதம் இறுதி வரை பணிநீட்டிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். ஆனால் எனது பணி திருப்திகரமாக இல்லை என்ற காரணத்தைக் கூறி, எனது கோரிக்கையை பள்ளியின் தாளாளர் நிராகரித்து விட்டார். எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.வி. முரளிதரன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கடந்த 32 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி உள்ளார்.அவர் மீது பணி தொடர்பாக ஒரு குற்றச்சாட்டுக்கூட இல்லை. ஆனாலும், பணி திருப்திகரமாக இல்லை எனக்கூறி பணி நீட்டிப்பு மறுக்கப்பட்டுள்ளது.

கல்வியாண்டின் நடுவில் ஓர் ஆசிரியர் பணி ஓய்வு பெற்றால் அந்தப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவேதான் அந்த ஆசிரியர் விரும்பும்பட்சத்தில் கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற பொதுவான நடைமுறை உள்ளது. இந்த நடைமுறை மனுதாரர் விவகாரத்தில் மறுக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு பணி நீட்டிப்பு வழங்க மறுத்து பள்ளியின் தாளாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். மேலும், கல்வியாண்டின் நடுவில் ஒய்வு பெறும் ஆசிரியர்களை, மாணவர்களின் நலன்கருதி அந்த கல்வியாண்டு முடியும் வரை பணியாற்ற பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Monday, January 14, 2019

356 உதவிதொடக்ககல்வி அலுவலகங்கள்&3000 பள்ளிகள் மூடப்படும் அபாயம்


அனைவருக்கும் இனி அரிசி கார்டு: ரேஷனில் வருகிறது மாற்றம்


பொங்கல் பரிசு, 1,000 ரூபாய் வழங்குவதில் ஏற்பட்ட திடீர் குழப்பத்தால், சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத, 'என்' கார்டுகளையும், அரிசி கார்டுகளாக மாற்ற, உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவை, குறைந்த விலையிலும் விற்கப்படுகின்றன.

இவற்றை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். காகித கார்டு புழக்கத்தில் இருந்த போது, அரிசி, சர்க்கரை, காவலர், எந்த பொருளும் வாங்காதது என, நான்கு வகை, ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. அதில், அரிசி, காவலர் கார்டுகளுக்கு, அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டன. சர்க்கரை கார்டுக்கு, அரிசி தவிர்த்த, மற்ற பொருட்கள் வழங்கப்பட்டன. 'என்' கார்டுக்கு, எந்த பொருட்களும் கிடையாது. தமிழகத்தில், 2017 ஏப்ரல் முதல், 'ஆதார்' விபரத்தின் அடிப்படையில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

இதையடுத்து, முன்னுரிமை, முன்னுரிமை அல்லாதது, முன்னுரிமை அல்லாத சர்க்கரை, எந்த பொருளும் இல்லாதது என்ற வகைகளில், கார்டுகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், ஏற்கனவே இருந்த அரிசி, சர்க்கரை கார்டுதாரர்களின் அடிப்படையில், ரேஷனில், பொருட்கள் வழங்கப்படுகின்றன. பொங்கலை முன்னிட்டு, 2.02 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு துண்டுடன், 1,000 ரூபாய் அடங்கிய பரிசு தொகுப்பை, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, அவை, வசதியானோருக்கு வழங்க, எதிர்ப்பு எழுந்தது. நீதிமன்ற உத்தரவை அடுத்து, சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத கார்டுகளுக்கு, 1,000 ரூபாய் வழங்குவது நிறுத்தப்பட்டது.

பின், நீதிமன்ற அனுமதியுடன், சர்க்கரை கார்டுகளுக்கு, 1,000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த பிரச்னை, இனி ஏற்படாமல் இருக்க, சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத கார்டுகளையும், அரிசி கார்டுகளாக மாற்ற, உணவு துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் மட்டும், மக்களின் விருப்பத்தின் அடிப்படையில், ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதனால், வசதி படைத்தோர், அரிசி கார்டு வைத்துள்ளனர். வசதியாக இருந்த போது, சர்க்கரை, எந்த பொருளும் இல்லாத கார்டு வாங்கியோர், தற்போது, ஏழ்மையில் உள்ளனர். இதனால், அவர்களுக்கு, ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை. பொங்கல் பரிசு உள்ளிட்ட அரசின் இலவச திட்டங்கள், அரிசி கார்டுகளுக்கு மட்டும் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட் கார்டு வழங்குவதால், ரேஷன் முறைகேடு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே, உணவு மானியத்திற்கு, ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் செலவாகும் நிலையில், சர்க்கரை, எந்த பொருளும் இல்லாத கார்டுகளை, வகை மாற்றம் செய்வதால் கூடுதலாக செலவு ஏற்பட வாய்ப்பில்லை.

இதனால், சர்க்கரை, எந்த பொருளும் இல்லாத கார்டுகளையும், 2017ல், அரிசி கார்டுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கு, சில அரசு உயரதிகாரிகள் ஒப்புதல் தரவில்லை. தற்போது, பொங்கல் பரிசு விவகாரத்தில் ஏற்பட்டது போல், மீண்டும் பிரச்னை ஏற்படாமல் இருக்க, 10.50 லட்சம் சர்க்கரை மற்றும், 42 ஆயிரம் எந்த பொருளும் இல்லா கார்டுகள், விரைவில், அரிசி கார்டுகளாக மாற்றப்பட உள்ளன. இதற்கு, அரசிடம் அனுமதி பெற்றதும், அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் செலவு ஏற்படுமா காகித கார்டு இருந்தபோது, ஒருவரே பல முகவரிகளில், மூன்று - நான்கு ரேஷன் கார்டுகள் வைத்திருந்தார். இதனால், 2017 துவக்கத்தில், 2.04 கோடி ரேஷன் கார்டுகளும், அவற்றில், ஏழு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களும் இருந்தனர். அதே ஆண்டு ஏப்ரல் முதல், ஆதார் விபரம் அடிப்படையில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்கப்படுகிறது. இதனால், ஒரே நபர், வேறு முகவரியில், கூடுதல் ரேஷன் கார்டு வாங்குவது தடுக்கப்பட்டது. ஒரு கார்டில் உறுப்பினராக இருப்பவர், வேறு கார்டில் உறுப்பினராக சேரவும் முடியாது. இதனால் தற்போது, 2.02 கோடி ரேஷன் கார்டுகளில், 6.55 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது, ரேஷன் கடைக்கு பொருட்கள் அனுப்புவது முதல், விற்பனை விபரம் அனைத்தும், கம்ப்யூட்டரில் பதிவாகிறது. விரைவில், கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து, ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதனால், வசதி படைத்தோர், வேறு நபர்களிடம், கார்டை கொடுத்து, பொருட்களை வாங்கும்படி கூற முடியாது. மேலும், ரேஷன் பொருட்கள் வாங்க விரும்பாதோர், அதை, அரசுக்கு விட்டுக் கொடுக்கும் வசதியும் துவக்கப்பட்டு உள்ளது. இது போன்ற காரணங்களால், உணவு மானியத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மிச்சமாகும். அந்த நிதியில், சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத ரேஷன் கார்டுகளுக்கு, அரிசி கார்டாக மாற்றி, பொருட்கள் வழங்குவதில், கூடுதல் செலவு ஏற்படாது. வகை மாற்றம் செய்யக்கூடிய கார்டுதாரர்களில், அனைவரும் பொருட்களை வாங்க வாய்ப்பில்லை.

Thursday, January 10, 2019

அங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு


எல்.கே.ஜி.- யு.கே.ஜி., துவங்கப்படும் அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான உத்தரவை வாங்குவதில்லை என, ஜாக்டோ-ஜியோ ஆசிரியர்கள் முடிவு செய்தனர். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகின்றன.

இதற்காக உபரி பெண் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணிநிரவல் செய்ய அரசு உத்தரவிட்டது.இதையடுத்து அந்தந்த ஒன்றியங்களில் இளையோராக இருக்கும் உபரி பெண் ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பணிமாறுதல் உத்தரவு வழங்கும் பணி நடக்கிறது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அரசு கண்டுகொள்ளாததால், ' அங்கன்வாடி மையத்திற்கு மாற்றும் பணி உத்தரவை கையெழுத்திட்டு வாங்குவதில்லை,' என ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

ஜாக்டோ-ஜியோ நிர்வாகி ஒருவர் கூறியதாவது: எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., குழந்தைகளுக்கு கற்பிக்க மாண்டிச்சோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். இப்பயிற்சி பெற்ற பல ஆயிரம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். அவர்களை நியமிக்காமல் இடைநிலை ஆசிரியர்களை தகுதி இறக்கம் செய்து அங்கன்வாடி மையங்களில் நியமிப்பது கண்டிக்கத் தக்கது. இதனால் அங்கன்வாடிமையத்திற்கு மாற்றும் ஆணையை பெறுவதில்லை என முடிவு செய்தோம், என்றார்.

11-1-19 Morning prayer

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 117

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

உரை:
நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

பழமொழி:

Good beginning makes a good ending

நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்

பொன்மொழி:

நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை
மேற்கொள்கிறான்.

-ஜான்மில்டன்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) வெண்மைப் புரட்சியின் தந்தை என வருணிக்கப்படுபவர் யார்?
வர்கீஸ் குரியன்

2) ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தை எது?
1)டியூஸ்
2)எல்.பி.டபிள்யூ
3)பெனால்டி கார்னர்
4)நோ பால்பெனால்டி கார்னர்

நீதிக்கதை :

வண்ணம் மாறிய குள்ள நரி

                ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்தன.அங்கு ஒரு குள்ளநரியும் வசித்து வந்தது. அதற்கு அந்தக் காட்டிலிருக்கும் சிங்கத்தைப் பார்த்து மிகவும் பொறாமையாக இருந்தது.அது அந்தக் காட்டுக்கு அரசனாக இருப்பதைப் பார்த்துத் தானும் அரசனாக ஆகவேண்டும் என்று ஆசைப் பட்டது.
            ஒருநாள் குள்ளநரி ஒரு புலியின் கண்களில் படவே அதற்குப் பயந்து வேகமாக ஓட ஆரம்பித்தது.ஓடும் அந்த நரியைப்பின்தொடர்ந்து வேறு சில மிருகங்களும் புலிக்குப் பயந்து ஓடத தொடங்கின. அதைப் பார்த்த நரி எல்லா மிருகங்களும் தன்னைத் துரத்துவதாக எண்ணி இன்னும் வேகமாக ஓடிற்று.எப்படித் தப்பிப்பது என்று எண்ணிக் கொண்டே ஊரின் எல்லைக்கு வந்து விட்டது.
            அங்கே ஒரு வீட்டின் மதில் சுவர் சற்றுக் குட்டையாய் இருக்கவே அதன் மீது ஏறி உள்ளே குதித்தது.அங்கே இருந்த பெரிய தொட்டி நீருக்குள் விழுந்தது.சிறிது நேரம் தத்தளித்த நரி மெதுவாக மேலே வந்தது.அதற்குள் இருள் விலகி வெளிச்சம் பரவத் தொடங்கியது.தன உடல் முழுவதும் நீல நிறமாக இருப்பது கண்டு ஆச்சரிய பட்டது. தான்விழுந்தது ஒரு சாயம் தோய்க்கும் இடம் என்பதும் நீலநிறச் சாயத தொட்டிக்குள் தான் விழுந்து எழுந்ததும் புரிந்தது.நரிக்கு ஒரு உபாயம் தோன்றியது. 
              வேகமாக அந்த மதில் சுவரைத் தாண்டி காட்டுக்குள் நுழைந்தது.இரவு வரும் வரை மறைந்திருந்தது. திடீரென்று நரிக்கூட்டத்தின் முன் வந்து கம்பீரமாக நின்றது.அதைப் பார்த்த மற்ற விலங்குகள் பயந்து நடுங்கின. புதுமையான விலங்காக இருக்கிறதே என்று அடங்கிப்  பணிவாக நின்றன.
"எல்லாரும் கவனமாகக் கேளுங்கள்.நான் உங்களுக்கெல்லாம் அரசனாக கடவுளால் அனுப்பப் பட்டவன்.நீங்கள் எல்லோரும் எனக்கு கீழ்ப் படிந்து நடக்க வேண்டும்.இல்லையென்றால் உங்களை நான் சபித்து விடுவேன்"
அதிகாரத்துடன்  கூறிய நீல நரியைப் பார்த்துப் பயந்த மற்ற விலங்குகள் பணிந்து அகன்றன.சற்று நேரத்தில் சிங்கம் நீலநரி யிடம் வந்து நின்றது.
"ராஜாவே, இந்த நாட்டுக்குப் பழைய ராஜாவாகிய சிங்கராஜா, வணங்குகிறேன்.நீங்கள் எங்களுக்குக கடவுளால் அனுப்பப்பட்டவர். நாங்கள் எல்லாம் தங்களின் அடிமைகள் கட்டளையிடுங்கள்."என்று பணிவுடன் கூறி வணங்கி நின்றது.
"ஏ சிங்கமே, நீ இந்தக் காட்டில் யார் கண்ணிலும் படாமல் உன் குகைக்குள்ளேயே மறைந்து இருக்க வேண்டும்.நான் கட்டளையிட்டால்தான் வெளியே வரவேண்டும்."என்றது அதிகாரமாக.சிங்கமும் பணிந்து சென்றது.நீலநரிக்குப் படு குஷியாகிவிட்டது.லாலா என்று பாடியபடியே அது சிலநாட்கள் 
காட்டைச் சுற்றி வந்தது.
        ஒருசில நாட்களிலேயே மழைக்காலம் வந்தது.ஒருநாள் மாலைநேரம் நீலநரி கர்வத்துடன் ஒரு வெட்ட வெளியில் நின்று கொண்டிருந்தது. அப்போது சில நரிகள் கூட்டமாக நின்று ஊளையிடத தொடங்கின.அப்போது மழையும் பலமாகப் பெய்யத தொடங்கிற்று நீலநரிக்கு ஓதுங்கக்  கூட இடமில்லை.
        மழையில் நனைந்ததால் நரியின் நீல நிறம் கரைந்து ஓடியது.
இப்போது தன பழைய நிறத்தை அடைந்த நரியும் எல்லாநரிகளுடனும்கூடி ஊளையிடத் தொடங்கிற்று.பலநாட்களாக அடைத்து வைத்திருந்த தன ஆசையெல்லாம் கொட்டி அழகாக ஆனந்தமாக ஊளையிட்டது. 
          இதைப் பார்த்த மற்ற நரிகளுக்கும் பிற விலங்குகளுக்கும் அப்போதுதான் இது ஒரு நரி நம்மையெல்லாம் ஏமாற்றிவிட்டது எனபது தெரிந்தது. எல்லா விலங்குகளும் சீரிக் கொண்டு ஓடிவந்தன 
 சிங்கராஜா கோபமாக கர்ஜித்தது. தன நிலையறிந்து அந்தக் குள்ள நரி  ஒரே ஓட்டமாக ஓடத தொடங்கியது. 
           அந்த நீல மாயிருந்த நரி இப்போது அந்தக் காட்டைவிட்டு வேறு காட்டை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது சரியாயிற்று என்று சொல்லிக் கொண்டே ஓடிற்று.வெகுதூரம் சென்று திரும்பிப் பார்த்தது.
          இப்போது எந்த விலங்கும் தன்னைப் பின்தொடரவில்லை என்பதைத் தெரிந்து கொண்டது  அந்த நரி. சற்று நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டே சிந்தித்தது.என் ஆசை நிறைவேறிற்று. 
காட்டுராஜாவாகச் சிலநாட்கள் அந்தக் காட்டில் உலாவந்தேன் 
அதுபோதும் . என்று தனக்குள் புன்னகைத்துக்  கொண்டது.

இன்றைய செய்தி துளிகள் : 

1) பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2) கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை வருகின்ற 21 ஆம் தேதி தொடக்க விழா!

3) அரசுப்பள்ளி மாணவர்கள் 50 பேர் பின்லாந்து, சுவீடன் செல்ல பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!

4) பொதுப்பிரிவினருக்கான 10%  இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு 

5) உலகின் நம்பர்.1 குத்துச்சண்டை வீராங்கனை ஆனார் இந்தியாவின் மேரி கோம்!