இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, June 22, 2013

பள்ளிகளில் மதிப்பெண் சான்று பெறும்போதே, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி தவறிய மாணவர்கள், இணைய தளம் மூலம் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம் என, அரசு அறிவித்துள்ளது

.பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வு முடிவுகள், ஏற்கனவே வெளியான நிலையில், மதிப்பெண் சான்று வழங்கப்படுகிறது. மாணவர்கள், பள்ளிகளில் மதிப்பெண் சான்று பெறும்போது, இணைய தளம் வாயிலாக, வேலை வாய்ப்புக்கு பதிவு செய்து கொள்ள, அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.மாணவ, மாணவியர், ரேஷன் கார்டு நகல், ஜாதிச் சான்று நகல்களையும் கொண்டு செல்ல வேண்டும். ரேஷன் கார்டில், தங்களின் (பதிவுதாரர்) பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி தவறிய மாணவர்களும் பதிவு செய்து, மதிப்பெண் சான்றுடன், வேலை வாய்ப்பு பதிவு அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். 20ம் தேதி முதல், 15 நாட்களுக்கு இந்த சேவை இருக்கும் எனவும், 15 நாட்களில் பதிவு செய்வோருக்கு, ஜூன் 20ம் தேதிப் படியே பதிவு மூப்பு தரப்படும் என, வேலை வாய்ப்புத் துறை தெரிவித்துள்ளது

.வேலை வாய்ப்பு அலுவலங்களில் கூட்ட நெரிசலைத் தடுக்கவும், மாணவர்களின் அலைச்சலைப் போக்கும் வகையிலும், இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment