இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, June 29, 2013

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.

   தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வரும் நீதிபதி அல்டமாஸ் கபீர் வருகின்ற ஜூலை மாதம் 18-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருக்கு பதில் புதிய தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி நியமனம் செய்துள்ளார். தற்போது இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார்.

நீதிபதி பி.சதாசிவம் உச்ச நீதிமன்றத்தின் 40-வது தலைமை நீதிபதியாக வருகிற 19-ம் தேதி பதவி ஏற்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் எளிய நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். வருகிற 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அதுவரை அவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.

No comments:

Post a Comment