இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, July 24, 2013

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் நாளை முடிவு வெளியீடு

  பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவு, நாளை காலை, 10:30 மணிக்கு, தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தேர்வுத் துறை அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவிற்குப் பின், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முடிவுகள், 26ம் தேதி (நாளை) காலை, 10:30 மணிக்கு, www.dge.tn.nic.in என்ற தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியிடப்படும். கட்டணத்தைச் சரியாகச் செலுத்தி, அதன் விவரங்கள், தேர்வுத் துறையால் பெறப்பட்ட மாணவர்களின் முடிவுகள் மட்டும், முதல்கட்டமாக வெளியிடப்படுகிறது.

மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்கள், ஆக., 5 முதல், 8ம் தேதி வரை, தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் வந்து, பழைய மதிப்பெண் சான்றிதழைகளை ஒப்படைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். முடிவு கிடைக்காத மாணவர்கள், கட்டணம் செலுத்தியதற்கான ரசீதின் பின்புறம், பதிவு எண்ணைக் குறிப்பிட்டு, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, "இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி), தேர்வுத் துறை இயக்குனரகம், சென்னை-6' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, தேர்வுத் துறை தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment