இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, July 18, 2013

பள்ளிக் கல்வித் துறையில் 400 பேர் கருணை அடிப்படையில் நியமனம்

பள்ளிக் கல்வித் துறையில் 400 பேர் விரைவில் கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கருணை அடிப்படையிலான பணி நியமனம் கோரி 2002-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை விண்ணப்பம் செய்தவர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களில் தங்களுடைய பெயர்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கெனவே 1997-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை கருணை அடிப்படையிலான நியமனத்துக்குத் தகுதி வாய்ந்த 397 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment