இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, July 25, 2013

தமிழகம் முழுவதும் மறியல் 1,500 அரசு ஊழியர்கள் கைது

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள இரண்டரை லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மறியல் நடந்தது. சென்னையில் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் எழிலகம் முன்பு மறியல் செய்ய முயன்ற 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை ரயில்வே சந்திப்பில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேஸ்வரன் தலைமையில் மறியல் செய்ய முயன்ற 95 பெண்கள் உள்பட 215 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோல், தூத்துக்குடியில் மாவட்ட தலைவர் சாந்தகுமார் தலைமையில் மறியல் செய்ய முயன்ற 210 பேர், கோவையில் மாவட்ட தலைவர் சிவஜோதி தலைமையில் செஞ்சிலுவை சங்கம் முன்பு மறியல் செய்ய முயன்ற 243 பேர், திருவண்ணாமலையில் தமிழ்நாடு நில அளவை சங்க மாநில தலைவர் ஆர்.பழனி தலைமையில் மறியல் செய்த 350 பேர் என மாநிலம் முழுவதும் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment