இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, July 24, 2013

பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் டி.சபீதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:– மீண்டும் இடமாற்றம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனராக (முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்து) பணியாற்றி திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஏற்கனவே மாற்றப்பட்ட ஆர்.பூபதி தற்போது திருச்சி மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (அனைவருக்கும் கல்வி திட்டம்–எஸ்.எஸ்.ஏ.) நியமிக்கப்படுகிறார். திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்து விருதுநகர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (எஸ்.எஸ்.ஏ.) முன்பு மாற்றப்பட்ட கே.செல்வகுமார் தற்போது திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணிஅமர்த்தப்பட்டுள்ளார். திருச்சி–வேலூர் திருச்சி மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி (எஸ்.எஸ்.ஏ.) வி.ஜெயக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு, விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அவர் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (எஸ்.எஸ்.ஏ.) பொறுப்பையும் கூடுதலாக கவனித்துக்கொள்வார்.

வேலூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி (எஸ்.எஸ்.ஏ.) ஆர்.மகாலிங்கம் மாற்றப்பட்டு, பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். கூடுதல் பொறுப்பு வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி டி.வி.செங்குட்டுவன் இடமாற்றம் செய்யப்பட்டு மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (எஸ்.எஸ்.ஏ.) பணிஅமர்த்தப்படுகிறார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனிப்பார்.

No comments:

Post a Comment