இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, July 19, 2013

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்:ஜனவரி முதல் வழங்க அரசு உத்தரவு

பட்டதாரி ஆசிரியர்களுக்கு, கடந்த ஜனவரி, 18ம் தேதியை கணக்கிட்டு, இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வை வழங்கலாம்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது."பட்டதாரி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பதவியில் பணிபுரியும் பட்ட தாரி ஆசிரியர், எம்.எட்., - எம்.பில்., மற்றும் பிஎச்.டி., தகுதிகளை, கூடுதலாக பெற்றிருந்தால், இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்கலாம்' என, கடந்த ஜன., 18ம் தேதியிட்ட அரசாணையில், தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

ஊதிய உயர்வு:

ஆனால், எந்த தேதியில் இருந்து ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை, அரசாணையில் கூறவில்லை. இதனால், 20 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர், ஊக்க ஊதிய உயர்வு பெற முடியாமல், அவதிபட்டு வந்தனர். . இதைத் தொடர்ந்து, அரசாணையில் இருந்த குழப்பத்தை சரிசெய்து, பள்ளிக்கல்வி துறை செயலர் சபிதா, புதிய உத்தரவை வெளியிட்டு உள்ளார். உத்தரவு விவரம்:

கடந்த ஜனவரியில் வெளியிட்ட அரசாணையின்படி, பட்டதாரி ஆசிரியர்கள், எம்.எட்., அல்லது எம்.பில்., அல்லது பிஎச்.டி., பட்டம் பெற்றிருந்தால், அது, இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான, உயர் கல்வி தகுதியாக கருதி, அரசாணை வெளியான தேதியில் இருந்து வழங்கலாம்.ஒரு ஆசிரியரின் மொத்த பணிக் காலத்தில், அதிகபட்சமாக, இரு ஊக்க ஊதிய உயர்வுகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், இந்த, இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்படுகிறது.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment