இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, July 18, 2013

100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் நியமனம்

தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கான புதிய தலைமையாசிரியர்கள் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டனர். பதவி உயர்வுப் பட்டியலில் இருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களிலிருந்து இவரகள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடைபெற்றது.

அதேபோல், இந்த 100 உயர் நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக இருந்தவர்கள், காலியாக இருந்த பிற உயர்நிலைப் பள்ளிகளுக்கு இடமாற்றம செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 100 அரசு உயர் நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டது. இந்தப் பள்ளிகளில் 100 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களும், 900 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களும் ஏற்பட்டன. முதல் கட்டமாக 100 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளைத் தொடங்க ஏதுவாக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment