இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, December 13, 2012

21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: ஜெயலலிதா வழங்கினார்

   முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றதும் மாணவ சமுதாயம் மீது அக்கறை கொண்டு கல்வித்துறைக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளார். மாணவர்களை ஊக்கு விக்கும் வகையில் ஏற்கனவே விலையில்லா சைக்கிள், விலையில்லா லேப்-டாப், சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சத்துணவு திட்டமும் செம்மைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக  விலையில்லா புத்தகப்பைகள், விலையில்லா காலணிகள், விலையில்லா வண்ணப் பென்சில்கள், விலையில்லா கணித உபகரணப்பெட்டிகள், புவியியல் வரைபட புத்தகம் (அட்லஸ்) விலையில்லா சீருடைகள் ஆகியவை இன்று வழங்கப்பட்டது. மொத்தம் 92 லட்சம் மாணவ- மாணவிகள் இதன் மூலம் பயன்பெறுகிறார்கள். மாணவர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா இன்று பகல் 12 மணிக்கு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியில் கல்லூரித் திடலில் நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், 20,920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கி பேசினார். முதல்-அமைச்சரைத் தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும், மாவட்ட வாரிய ஆசிரியர்களுக்கான நியமன ஆணைகளை அவரவர் இருப்பிடத்துக்கே சென்று வழங்கினார்கள். முன்னதாக தமிழக அரசின் தலைமைச்செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வரவேற்று பேசினார்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி முன்னிலை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா நன்றி கூறினார்.

விழாவில் கலந்து கொண்டு ஆசிரியர் பணி நியமன ஆணைகளை நேரில் பெற்றுக் கொள்வதற்காகவும், கல்வி உபகரணங்களை பெறுவதற்காகவும் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் தனி பஸ்களில் சென்னை வந்தனர். அவர்கள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்டபந்தலில் அமர வைக்கப்பட்டனர். விழாவில் கல்வியின் சிறப்புக்களையும், முதல்- அமைச்சர்  ஜெயலலிதா கல்வித்துறைக்கு செய்து வரும் சாதனைகளையும் எடுத்துக்கூறும் வகையில் மேடை நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

No comments:

Post a Comment