இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, December 30, 2012

பல்கலைக்கழக மானியக்குழு நடத்திய கல்லூரி உதவி பேராசிரியர் தகுதி தேர்வு 7½ லட்சம் பேர் எழுதினார்கள்

  பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான தகுதி தேர்வு இந்தியா முழுவதும் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 7½ லட்சம் பேர் எழுதினார்கள். கல்லூரி ஆசிரியர்கள் தகுதி தேர்வு அரசு மற்றும் தனியார் கலைக்கல்லூரிகளில் ஆசிரியராக சேர்வதற்கு முன்பு முதுகலை பட்டப்படிப்புடன் எம்.பில். படித்தால் போதும் என்று இருந்தது.

தற்போது அந்த நிலை மாறி பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் நெட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். அல்லது மாநில அரசு நடத்தும் ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் நெட் தேர்வு நேற்று நாடுமுழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 77 மையங்களில் 7 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதினார்கள். தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல நகரங்களில் தேர்வு நடந்தது. 12 ஆயிரத்து 500 பேர் எழுதினார்கள் சென்னையில் பச்சையப்பன் கலை அறிவியல் கல்லூரி, புதுக்கல்லூரி, உள்பட 10 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

தேர்வு காலையிலும், மாலையிலும் நடைபெற்றது. சென்னை நகரில் மட்டும் 12 ஆயிரத்து 500 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு 3 தாள்களை கொண்டது. முதல் தாள் காலை 9.30 மணிக்கு தொடங்கி காலை 10.45 மணிக்கு முடிந்தது. இதற்கு 100 மதிப்பெண்கள். 60 கேள்விகள் கேட்கப்பட்டு அதில் 50 கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். 2–வது தாள் காலை 10.45 மணிக்கு தொடங்கி 12 மணிக்கு முடிந்தது. இதில் 50 கேள்விகள் கேட்கப்பட்டு அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கவேண்டியது கட்டாயம். இந்த தாளுக்கு 100 மார்க் ஆகும். 3–வது தாள் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிந்தது. இந்த தாளுக்கு 150 மதிப்பெண்கள்.

75 கேள்விகள் கேட்கப்பட்டு அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கவேண்டும். தேர்வை எழுத ஆண்களும், பெண்களும் வந்திருந்தனர். சில பெண்கள் கைக்குழந்தையுடன் வந்திருந்தனர். அவர்கள் தேர்வு அறைக்கு வெளியே கணவர் அல்லது தாயிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தேர்வு எழுதினார்கள்.

No comments:

Post a Comment