இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, March 19, 2013

ஓய்வூதியதாரர்கள் ஆண்டு நேர்காணல்: ஏப்ரல் 1-ல் தொடக்கம

  தமிழகம் முழுவதும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான ஆண்டு நேர்காணல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூன் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மேலே குறிப்பிட்ட காலவரையறைக்குள் தங்களது உயிர்வாழ் சான்றினை ("லைஃப் சர்ட்டிபிகேட்') அந்தந்த ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும்.

அதாவது ஓய்வூதியம்- குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்களுக்கு உரிய கருவூல அலுவலகத்தில் ஓய்வூதிய புத்தகம் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிதித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக சென்னை  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: ஓய்வூதியதாரர்கள், தங்களின் ஓய்வூதிய ஆணை மற்றும் வங்கி கணக்குப் புத்தகத்துடன் வரும் ஜூன் 28ஆம் தேதிக்குள் சென்னை, கல்லூரி சாலையில் அமைந்துள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிக்குள் நேரில் வர வேண்டும். நேரில் வர இயலாத ஓய்வூதியதாரர்கள், தங்களின் உயிர்வாழ் சான்றிதழை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், கல்லூரி சாலை, சென்னை - 6 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

No comments:

Post a Comment