இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, March 26, 2013

ஏப்ரல் 1 முதல் ரயில் கட்டணங்கள் உயர்வு

  ரயில் முன்பதிவு மற்றும் தட்கல் கட்டணங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளன. சமீபத்தில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. எனினும் முன்பதிவு, ரத்து மற்றும் தட்கல் கட்டணங்கள் உயர்த்தப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவித்தார். இதன்படி, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பயணிகள் ரயில் கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வருகிறது. இரண்டாம் வகுப்பு மற்றும் தூங்கும் வசதி ரயில் முன்பதிவு கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை.

அதே வேளையில் ஏ.சி., வகுப்பு முன்பதிவு கட்டணங்கள் ரூ. 15 ல் இருந்து ரூ. 25 ஆக உயர்த்தப்படுகிறது. சூப்பர் பாஸ்ட் கட்டணங்கள் இரண்டாம் வகுப்பு மற்றும் தூங்கும் வசதி ரயிலுக்கு ரூ. 10 உயர்த்தப்படுகிறது. இது ஏ.சி., வகுப்புகளுக்கு ரூ. 15 முதல் 25 வரை உயர்த்தப்படுகிறது. இதே போல், தட்கல் கட்டணம் இரண்டாம் வகுப்புக்கு ரயில் அடிப்படை கட்டணத்திலிருந்து 10 சதவீதமும், ஏ.சி., வகுப்புக்கு 30 சதவீதமும் உயர்த்தப்படுகிறது. முன்பதிவு ரத்து செய்ய வசூலிகக்கப்பட்டு வந்த தொகை தற்போது உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு ரூ. 50ம், ஆர்.ஏ.சி., மற்றும் வெயிட்டிங் லிஸ்ட் பயணிகளுக்கு படுக்கை வசதிக்கு ரூ. 5ம், ஏ.சி., வகுப்பு பயணிகளுக்கு ரூ. 10ம் வசூலிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment