இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, April 24, 2013

ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் பணி:விண்ணப்பங்கள் வரவேற்பு

  தொடக்கக் கல்வித் துறையில் 6 முதல் 8 வகுப்புகள் உள்ள பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், இசை ஆசிரியர், தையல் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தாற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 5,000 வழங்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில், கல்வித்துறை அலுவலர்களைக் கொண்டு குழுவால் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, பணி நாடுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் ஒரு பள்ளியில் தினசரி மூன்று மணி நேரம் பணிபுரிய வேண்டும்.

வாரம் ஒன்றுக்கு மொத்தம் 9 மணி நேரம் பணி நேரமாகும். பணி நாடுநர்கள் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். மேலும், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயரைப் பதிவு செய்து, அப்பதிவு தொடர்ந்து நடப்பில் இருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் சாதிச் சான்று நகல், இருப்பிடச் சான்று நகல், 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை நகல் ஆகியவற்றை அனுப்ப வேண்டும். 137 பணியிடங்கள்: உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு 49 இடங்களும், ஓவிய ஆசிரியர் பணிக்கு 52 இடங்களும், இசை, தையல், கணினி, தோட்டக்கலை, வாழ்க்கைத் திறன், தகவல் தொடர்புத் திறன், கட்டுமான ஆசிரியர் பணிகளுக்கு 36 இடங்களும் உளளன.

விண்ணப்பங்களை சுய விலாசமிட்ட ரூ. 5 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட உறையுடன் ஒப்படைத்து, ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். முதன்மைக் கல்வி அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஏப்ரல் 30-ஆம் தேதி கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று, முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment