இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, April 27, 2013

மே 9-ந்தேதி பிளஸ்-2, மே 31-ல் 10-ம்வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1-ந்தேதி தொடங்கிய பிளஸ்-2 தேர்வு மார்ச் 27-ந்தேதி முடிவடைந்தது.  மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வினை எழுதினார்கள். இது தவிர தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் தேர்வு எழுதினார்கள். தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 17-ந்தேதி முடிவடைந்தது. கம்ப்யூட்டர்களில் மதிப்பெண்களை பதிவு செய்யும் வேலை நடந்து வருகிறது.   மே 10-ந்தேதிக்குள் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் இன்று பிளஸ் -2 தேர்வு முடிவுகள் வருகிற மே மாதம் 9-ந்தேதி வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 19-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12-ந்தேதி வரை நடைபெற்றது. 10 1/2 லட்சம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அதன் வினாத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 17-ந்தேதி தொடங்கியது. இந்த பணி முடிவடையும் நிலையில் உள்ளது. அதன் பிறகு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இதற்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது. எனவே, மே 31-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டள்ளது.

No comments:

Post a Comment