இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, June 07, 2015

கட்டாய கல்விச்சட்டத்தில் ஒதுக்கீடு 25% பட்டியல் குறித்த தெளிவில்லை

கட்டாய கல்வி உரிமைச் சட்டப் படி தனியார் பள்ளிகள் வழங்க வேண்டிய 25 சதவீத ஒதுக்கீடு குறித்த பட்டியலை மெட்ரிக்குலேஷன்  பள்ளிகள் இயக்ககம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்கள் அதில் தெளிவாக  குறிப்பிடவில்லை.

மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு கொண்டு  வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு  ஆண்டும் மாணவர்கள் சேர்க்கையின் போது, சமூகத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 25 சதவீத இடம்  ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட வேண்டும். இந்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி குழந்தைகளுக்கு கல்விக் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்று  தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்பட்டாலும் கடந்த 2 ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை  தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு செலுத்த வேண்டிய தொகை மட்டும் ரூ.150 கோடி. ஆனால் அதை அரசு இன்னும் வழங்கவில்லை. இதனால்  தனியார் பள்ளி நிர்வாகத்தினர்,  மேற்கண்ட 25 சதவீத ஒதுக்கீட்டில் இந்த ஆண்டு குழந்தைகளை சேர்க்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்து  வருகின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரம் கடந்தும் 25 இட ஒதுக்கீட்டில் சேர்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால், 3731  தனியார் பள்ளிகளில்  மாவட்ட வாரியாக  சேர்க்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த விவரங்களை மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் தனது  இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் எல்கேஜி, ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை, 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள இடங்கள்  குறித்த  விவரங்களை வெளியிட்டுள்ளது.

இணையத்தில் வெளியிட்டுள்ள பட்டியலில் எல்கேஜி வகுப்புகள் குறித்தும், அதில் உள்ள பிரிவுகள் குறித்தும், மொத்த இடங்கள் குறித்தும் தெரிவிக்– ்கப்பட்டுள்ளது. அத்துடன் 25 சதவீத இடங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள்  கொடுத்த பட்டியல்களை அப்படியே வெளியிட்டுள்ளனர். எத்தனை குழந்தைகள் சேர்க்கப்பட்டனர் என்ற விவரம் இல்லை. மத்திய அரசின் சட்டப்படி  எல்கேஜி வகுப்பில் சேர்க்க அனுமதி உண்டா என்ற விவரங்கள் அதில் இடம் பெறவில்லை.

மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள இடங்களுக்கு ஏற்ப எத்தனை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன என்ற விவரங்களும் இல்லை. குறிப்பாக  சென்னையில் உள்ள 321 பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகளில் மொத்த இடங்கள் 11130 உள்ளதாகவும், விண்ணப்பங்கள் 2903 தான் வழங்கப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment