இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, June 27, 2015

செயல்வழிக் கற்றல் பின்பற்றலை உறுதி செய்ய உத்தரவு

தமிழகத்தில், முப்பருவக்கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் கல்வி முறையில், தொய்வு ஏற்பட்டுள்ளது. இதை போக்கும் வகையில், புதிய வழிமுறைகளை பின்பற்ற, ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அலுவலர்களுக்கும், தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை, செயல்வழிக்கற்றல் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது.

இதில், பாடங்கள் அனைத்தும், வண்ண அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறனுக்கேற்ப, கற்றுக்கொள்ளும் வகையில், வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால், வகுப்பறையில், புத்தகங்களை கொண்டு, பாடம் நடத்தும் முறை தடை செய்யப்பட்டிருந்தது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் வகையில், ஒன்றாம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை, முப்பருவக்கல்வி முறை கொண்டு வரப்பட்டது.இதில், புதிய பாடப்புத்தகம் வழங்கிய நிலையில், வண்ண அட்டையில் பாடம் நடத்துவது குறித்த, தெளிவான வழிமுறைகள் வழங்கப்படவில்லை.

இதனால், பெரும்பாலான பள்ளிகளில், செயல்வழிக்கற்றல் முறையை கைவிட்டு, பாடப்புத்தகங்களை கொண்டு, பாடம் நடத்த துவங்கினர். இதனால், செயல்வழிக்கற்றல் முறையில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், செயல்வழிக்கற்றல் முறையில், பின்பற்ற வேண்டிய புதிய வழிமுறைகள் குறித்து, தொடக்கக்கல்வி இயக்குனர், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கூறியிருப்பதாவது:

தொடக்கக்கல்வி துறையில், முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்பட்ட பின், செயல்வழிக்கற்றலில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதை போக்க, புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளது. இதன்படி அனைத்து பள்ளிகளும், ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை, எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் முறையை புதிய வழிமுறைகளின்படி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதன்படி நடத்தப்படுகிறதா என்பதை, உதவி தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் உள்ளிட்டோர், ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment