இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, December 20, 2017

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் அரையாண்டு தேர்வு மார்க் விவரங்களை கல்வித்துறையில் சமர்ப்பிக்க வேண்டும்: விடுமுறையில் விடைத்தாள் திருத்தவும் உத்தரவு


பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் அரையாண்டு தேர்வு மதிப்பெண் விவரங்களை கல்வித்துறையில் சமர்ப்பிக்கவும், இதற்காக விடுமுறை நாட்களிலேயே விடைத்தாள்களை திருத்தி வழங்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த 7ம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கியது.

வரும் 23ம் தேதி தேர்வுகள் முடிந்து 24ம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. அதேசமயம் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை கிடையாது. இந்த விடுமுறையில் இவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தவேண்டும். 10ம் வகுப்புக்கு தினந்தோறும் ஒரு பாட ஆசிரியர் வரவேண்டும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரை நாளுக்கு ஒரு பாட ஆசிரியர் வீதம் வரவேண்டும். இந்த சிறப்பு வகுப்புகளில் செய்முறை தேர்வு மற்றும் பாடத்தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் அரையாண்டு விடுமுறையில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தி அவர்களுக்கு வழங்கவேண்டும். அதோடு அனைத்து மாவட்டங்களில் உள்ள பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் அரையாண்டு தேர்வின் மதிப்பெண் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அடுத்த மாதம் ஆசிரியர்களுக்கு கூட்டம் நடத்தப்படும். பின்னர் மாணவர்களின் தேர்ச்சிக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் பொதுத்தேர்வு மாணவர்களின் விடைத்தாள்களை தற்போதே ஆசிரியர்கள் திருத்த தொடங்கி விட்டனர்.

No comments:

Post a Comment