இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, December 29, 2017

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் தட்கலில் விண்ணப்பிக்கலாம்


அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தரதேவி நேற்று வெளியிட்ட அறிக்கை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள் டிசம்பர் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட தேதிக்குள் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தக்கல்) ஜனவரி 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். சேவை மையங்கள் பற்றிய விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்வுக் கட்டணமாக ரூ.125 மற்றும் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.500, ஆன்லைன் கட்டணம் ரூ.50 உள்பட மொத்தம் ரூ.675ஐ செலுத்த வேண்டும். தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித் தேர்வர்களுக்கும் அந்தந்த கல்வி மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இது குறித்த விவரம் ஹால்டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment