இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, April 28, 2017

நாளையும், நாளை மறுநாளும் ஆசிரியர் தகுதி தேர்வு : தேர்வர்கள் காலை 8.30க்கு தேர்வு மையத்திற்கு வரவேண்டும்


தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் காலை 8.30க்கு தேர்வு மையத்திற்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 நாளையும், தாள் 2 நாளை மறுநாளும் நடைபெற இருக்கிறது.

தேர்வு மைய நடவடிக்கைகள் காலை 8.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.30 மணி வரை நீடிக்கும். காலை 8.30: தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்படுவர். காலை 9.30: தேர்வர்கள் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டு வருகையை பதிவு செய்தல். காலை 9.40: ஓஎம்ஆர் விடைத்தாள் விநியோகம் மற்றும் பெயர், பதிவு எண், வினாத்தாள் வரிசை எண் ஆகியவற்றை எழுதுதல். காலை 9.50: வினாத்தாள் கட்டுகள் தேர்வர் முன்னிலையில் திறக்கப்படுதல்.
காலை 9.55: வினாத்தாள் விநியோகம்; வினாத்தாள் வரிசை எழுத்து (ஏ,பி,சி,டி) ஓஎம்ஆர் விடைத்தாளில் பதிவு செய்தல்.

காலை 10: நீண்ட மணி அடித்ததும் தேர்வு தொடங்கும். தேர்வர் வினாத்தாள் மீதுள்ள சீல் உடைத்து தேர்வு எழுத தொடங்கலாம். காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் என ஐந்துமுறை மணிகள் ஒலிக்கும். பகல் 12.55: முன்னெச்சரிக்கை மணி ஒலிக்கப்படும்; அதன் பிறகு 5 நிமிடங்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதி. பகல் 1: நீண்ட மணி ஒலிக்கும். தேர்வு முடிவுக்கு வந்து ஓஎம்ஆர் ஷீட் கார்பன் நகல் தேர்வரிடம் வழங்கப்படும். தொடர்ந்து மதியம் 1 மணி முதல் 2.30 மணி வரை தேர்வு கூட அதிகாரிகள் நடவடிக்கைகள் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment