இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 04, 2017

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் மூலம் ரூ.33½ கோடி வருமானம் தேர்வு வாரியத்துக்கு கிடைத்தது


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மாதம் 6–ந் தேதி தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகளில் விண்ணப்ப படிவம் வழங்கும் பணி தொடங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடந்த மாதம் 23–ந் தேதி கடைசி நாள் ஆகும். பிளஸ்–2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த 2 லட்சத்து 37 ஆயிரத்து 293 பேரும், பி.எட் படித்த பட்டதாரிகள் 5 லட்சத்து 2 ஆயிரத்து 964 பேரும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257 பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

இவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு 29, 30–ந் தேதிகளில் நடைபெற உள்ளது. ரூ.33½ கோடி வருமானம் தற்போது மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது. பரிசீலனைக்கு பிறகு அவர்கள் தேர்வு எழுத அனுமதிச்சீட்டு தயாரித்து இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் எத்தனை தேர்வு மையங்களை அமைப்பது என்றும் தற்போது ஆலோசனை நடந்து வருகிறது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப படிவத்துடன் தேர்வு கட்டணமாக ரூ.500–ஐ வரைவோலையாக அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.250–ஐ வரைவோலையாக அனுப்ப சலுகை வழங்கப்பட்டது. மொத்த விண்ணப்பதாரர்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் ஆவர். இவர்கள் மூலம் ரூ.3½ கோடி வருமானம் கிடைத்தது. இவர்களை தவிர 6 லட்சத்து 257 பேரின் விண்ணப்பம் மூலம் ரூ.30 கோடியே 1 லட்சத்து 28 ஆயிரத்து 500 வருமானமாக கிடைத்தது. மொத்தத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ரூ.33½ கோடி வருமானம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment