இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, April 11, 2015

5மணி நேரம் மின் தடை

பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்ததால், ஐந்து மணி நேரம் மின் தடை செய்ய, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, வீடு, விவசாயம், தொழிற்சாலை என, மொத்தம், 2.60 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். அனல், நீர் உள்ளிட்ட மின் நிலையங்களில், உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், துணைமின் நிலையங்களுக்கு கொண்டு வரப்படுகிறது. பின், அங்கிருந்து, டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி துணையுடன், கேபிள், மின் கம்பம் வாயிலாக, மின் வினியோகம் செய்யப்படுகிறது. துணைமின் நிலையம், டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி ஆகியவை, எப்போதும், அதிக வெப்பத்துடன் இருப்பதால், அவற்றில் அடிக்கடி பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டி உள்ளது. அதன்படி, மின் வாரியம் சார்பில், குறிப்பிட்ட இடைவெளியில், ஒவ்வொரு பகுதியிலும், காலை, 9:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, பராமரிப்பு பணிக்காக, மின் வினியோகம் நிறுத்தப்படும். இதற்காக, மின் தடை செய்யப்படும் இடம், மின் வாரிய அதிகாரிகள் சார்பில், பொதுமக்களுக்கு, முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்ததால், பள்ளிகளுக்கு தடையில்லாமல் மின் வினியோகம் செய்யப்பட்டது. இதனால், கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஐந்து மணி நேரம் தொடர், மின் தடையில் இருந்து, பொதுமக்கள் தப்பித்தனர். இந்நிலையில், தேர்வு முடிந்ததை அடுத்து, துணைமின் நிலையம், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்டவற்றில், பராமரிப்பு பணி செய்யப்பட இருப்பதால், மீண்டும், ஐந்து மணி நேரம் மின் தடை செய்யப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோடைக்கால, மின் தேவை அதிகரிப்பால், 'ஓவர்லோடு' காரணமாக, மின் சாதனங்களில், அடிக்கடி பழுது ஏற்படும். இதைத் தவிர்க்க, அவற்றில், பராமரிப்பு பணி செய்ய வேண்டும். தற்போது, தேர்வு முடிந்துள்ள நிலையில், தொடர் பழுது ஏற்படும் இடங்களில், பராமரிப்பு பணி செய்யப்பட இருக்கிறது. இதற்காக, மின் தடை செய்யப்படும் இடங்கள், இரண்டு நாட்களுக்கு முன், பத்திரிகைகள் மூலம், மக்களுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment