இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, April 30, 2015

பள்ளிக்கல்வி துறையில் 3பேருக்கு பதவிஉயர்வு

பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 3 பேருக்கு இணை இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்த விவரம்:- பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் இருந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குநராக (தொழிற்கல்வி) பதவி உயர்வு பெற்றுள்ளார். சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செல்வக்குமார், மதுரையில் பிற்படுத்தப்பட்டோர், கள்ளர், சீர்மரபினர் துறை இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்னையா, இணை இயக்குநராக (நாட்டு நலப்பணித் திட்டம்) நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த உஷாராணி அனைவருக்கும் கல்வித் திட்ட இணை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநராக இருந்த குப்புசாமி, அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநராக (பணியாளர் நலன்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிசாரா வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநராக உள்ள சுகன்யாவிடம், நூலகத் துறை இணை இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில் நிர்வாக இணை இயக்குநராக இருந்த அமுதவல்லி, அதே நிறுவனத்தில் பாடத்திட்ட இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment