இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, April 18, 2018

அரசு கல்லூரியில் சேரணுமா? 25ம் தேதி முதல் விண்ணப்பம்


திருப்பூரில் உள்ள அரசு கலைக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம், வரும், 25ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி மற்றும் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியில், 18 இளங்கலை, எட்டு பட்ட மேற்படிப்பு பாடப் பிரிவுகள் உள்ளன; இரண்டு 'ஷிப்டு'களில், ஆயிரக்கணக்கில் மாணவர்கள் பயில்கின்றனர்.நடப்பு கல்வியாண்டுக்கான, முதல் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், வரும், 25ம் தேதி காலை, 10:00 மணி முதல் வழங்கப்படுகிறது.

விருப்பமுள்ளவர்கள், 50 ரூபாய் செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், ஜாதிச் சான்றிதழ் நகலை சமர்பித்து, இலவசமாக விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். மங்கலம் சாலை, குமரன் மகளிர் கல்லுாரியில், இளங்கலை பட்டப் படிப்புக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு வருகிறது; மாணவியர் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

No comments:

Post a Comment