இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, April 25, 2018

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள்: மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு தாள்?


பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கான மொழிப்பாடங்களின் 2 தாள்களை ஒன்றாக்கி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில், தற்போது உள்ள கல்வித்திட்டத்தின்படி பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ வகுப்பு மொழிப்பாடங்களுக்கு தாள் 1, தாள் 2 என இரண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மொழிப்பாடங்களுக்கு 4 தேர்வுகளை மாணவர்கள் எழுதுகின்றனர்.

இதுதவிர முதன்மை பாடங்களுக்காக 4 தேர்வுகள் உள்ளன. அவற்றையும் சேர்த்து 10 தேர்வுகளை மாணவர்கள் எழுதுகின்றனர். மாணவர்களின் இந்த தேர்வுச் சுமையை குறைப்பதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக மொழிப்பாடங்களின் தாள் 1, தாள் 2 தேர்வுகள் இரண்டையும் இணைத்து ஒரே தேர்வாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் ஆகிய இரண்டு பாடங்களையும் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் 4 முக்கிய பாடங்களிண் எண்ணிக்கையை மூன்றாக குறைக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த மாற்றத்தைக் கொண்டு வர தில்லியிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment