இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 03, 2018

தேர்தல் பணி ஊதிய நிலுவை; ஆசிரியர்கள் போராட்டம்


ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பணி செய்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க கோரி, மாநகராட்சி அலுவலகத்தில், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதியில் ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களாக 232 பூத்களில்ஆசிரியர்கள் பணியாற்றினர். இதில், 19 பேருக்கு ஊதியர் வழங்கப்படவில்லை.

தேர்தல் கமிஷன் வழங்கிய ஊதியத்தை பெற்று தனது வங்கி கணக்கில் வைத்துள்ள மாநகராட்சி நிர்வாகம் தங்களுக்கு வழங்காமல் இழுத்தடிப்பதாக கூறி, ஆசிரியர்கள் நேற்று மாலை, மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கனகராஜா, மாநகர நிர்வாகிகள் ஜோசப், குழந்தை அற்புதராஜ் உள்ளிட்டோர் ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட னர்.தேர்தல் பிரிவு அலுவலர் ராம் லட்சுமணன், பேச்சு நடத்தினார். இதில், மே மாதம் இந்த நிலுவை தொகை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனால், ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்

No comments:

Post a Comment