இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, April 04, 2018

ரயில்வே அறிவிப்பு


இனி ரயில்களில் ஏ/சி பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு மென்மையான, இதமான, சுத்தமான போர்வைகள் வழங்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இதுவரை வழங்கப்படும் போர்வைகள் கனமாகவும், கம்பளிகளில் பிசிறுகளுடனும், அழுக்குடனும் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் இனி வழங்கப்படும் போர்வைகளின் எடை 450 கிராம் மட்டுமே இருக்கும். தற்போது வழங்கப்படும் போர்வைகளின் எடை சுமார் 2.2 கிலோவாகும். இது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையே மாற்றப்படும்.

ஆனால் இனி போர்வைகளை குறைந்த இடைவெளியில் தோய்க்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது

நாட்டின் தலைமை தணிக்கைக் குழு (சிஏஜி) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் ரயில் ஏ/சி பெட்டிகளில் வழங்கப்படும் போர்வைகளின் அசுத்தம், எடை, மற்றும் தலகாணிகளின் தரம், சுத்தம் ஆகியவை பற்றி விமர்சித்திருந்தது. இதனையடுத்து இந்த நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment