இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, April 28, 2018

பாரதிதாசன்

1.தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என்
தாய் தடுத்தாலும் விடேன்.

2.பூனைகள் அல்லர், அவர்வழி வந்தோர்
புலிநிகர் தமிழ் மாந்தர்.

3.சாகச் செய்வானை சாகச் செய்யாமல்
சாகின்றாய் தமிழா சாகின்றாயே!

4.அஞ்சாமை வேண்டும் தமிழர்க்கே - பகையின்
அழிவுக்கடலின் ஆழத்தில் மகிழ!

5.தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்பினோம்
தூய தமிழரை தமிழ் கொண்டு எழுப்பினோம்.

6.தமிழர்களைக் காட்டிக் கொடுக்கும் தமிழன்
தமிழன் எனப்படுதல் தப்பு

7.செந்தமிழ் நாட்டைத் தில்லி ஒழிக்குமுன்
தில்லி தன்னை ஒழிக்க வேண்டும் நாம்.

8 மீள்வது நோக்கம் - இந்த
மேன்மைத் திராவிடர் மீளுவ தின்றேல்
மாள்வது நோக்கம்

9.தமிழ் எங்கள் இளமைக்குப் பால்

10.எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!

11.சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென்றூதூது சங்கே!

12.நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப் படி
காலையிற்படி கடும்பகல் படி
மாலை, இரவு பொருள்படும்படி
நூலைப்படி
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
அறம்படி பொருளைப்படி
அப்படியே இன்பம்படி
சாதி என்னும் தாழ்ந்தபடி
நமக்கெல்லாம் தள்ளுபடி
சேதி அப்படி தெரிந்துபடி
பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகம் ஏமாறும்படி
வைத்துள்ள நூற்களை ஒப்புவ தெப்படி?

- புரட்சிக்கவி பாரதிதாசன்

No comments:

Post a Comment