இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, September 13, 2013

மாணவர்களுக்கு ஓவிய போட்டி: செப்.,30க்குள் முடிக்க உத்தரவு

மாநில ஓவியபோட்டிக்காக, மாணவர்களை தேர்வு செய்யும் வகையில், பள்ளிகளில் போட்டிகள் நடத்தி, செப்., 30க் குள் முடிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம் மூலம், 6, 7, 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஓவிய போட்டி நடத்தப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு இல்லை. ஓவியம் வரைய ஏ 4 சீட், சாதாரண தாள்கள், கலர் மற்றும் பெயின்ட் உபயோகித்து கொள்ளலாம்.

ஓவியத்திற்கு பின்புறம் மாணவரின் பெயர், வகுப்பு, பிரிவு, பள்ளி விலாசம், தந்தை/ தாய் பெயர், பள்ளி தொலைபேசி எண் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும், 3 சிறந்த படைப்புக்களை தேர்வு செய்து, ஓவியத்துடன், தேசிய நீர்வள வாரியத்திற்கு அனுப்ப வேண்டும். பள்ளி அளவிலான போட்டிகளை , செப்., 30 க்குள் நடத்தி முடிக்க வேண்டும். இதில், தேர்வு செய்யப்படும் 50 பேருக்கு, சென்னையில் நவ., 9 ல் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும்.

No comments:

Post a Comment