இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, September 19, 2013

காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை 2014–ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் தகுதி தேர்வு நடத்தி நிரப்பவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

50 சதவீதம் மதிப்பெண் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை தனியார் நிறுவனங்கள் மூலம் எல்காட் நிறுவனம் நிரப்பியது. இந்த நிலையில், 2006–ம் ஆண்டு 1,880 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதேநேரம் ஏற்கனவே பணியில் உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு தேர்வு நடத்தி, பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சிறப்பு தேர்வில் ஏற்கனவே ஆசிரியராக உள்ளவர்கள் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது. அனுமதிக்க வேண்டும் இதன் அடிப்படையில், 2008–ம் ஆண்டு நடந்த சிறப்பு தகுதி தேர்வில் 894 கம்ப்யூட்டர் ஆசிரியர்களும், 2010–ம் ஆண்டு நடந்த தேர்வில் 125 ஆசிரியர்களும், 2012–ம் ஆண்டு நடந்த தேர்வில் 15 ஆசிரியர்களும் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்வு செய்யப்பட்டனர். இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு உத்தரவினை பிறப்பித்தார். அதில், ‘தகுதி தேர்வு மூலம் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் வரை, ஏற்கனவே பணியில் உள்ளவர்களை தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து ஐகோர்ட்டில் பலர் அப்பீல் செய்தனர். உரிமை இல்லை இந்த அப்பீல் வழக்குகளை நீதிபதிகள் ஆர்.பானுமதி, கே.கே.சசிதரன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:– ஏற்கனவே பணியில் உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பணிநீக்கம் செய்து அரசு பிறப்பித்த உத்தரவு சரியானது. இரண்டு முறை நடத்தப்பட்ட சிறப்பு தேர்வுகளில் தோல்வியடைந்த பின்னர், தங்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்று கோருவதற்கு ஆசிரியர்களுக்கு உரிமை இல்லை. அவர்கள் தற்காலிகமாகக் கூட பணியில் தொடரகூடாது.

அதேநேரம் ஏற்கனவே பணியில் இருந்து சிறப்பு தேர்வில் தோல்வியடைந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களின் பெயர்களை மீண்டும் வேலைவாய்ப்பு பதிவுவேட்டில் பதிவு செய்யவேண்டும். அப்போது, அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பதிவுமூப்பை வழங்கவேண்டும். பணியிடங்களை நிரப்ப வேண்டும் அதேபோல, அரசு எடுத்துள்ள கொள்கை முடிவின் அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை தேர்வு செய்யலாம். அந்த தேர்வில், ஏற்கனவே ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் கலந்து கொள்ளலாம். அப்போது வயது உச்சவரம்பை தளர்த்த வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அந்த விண்ணப்பத்தை தகுதி அடிப்படையில் அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை 2014–ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி நிரப்பவேண்டும்.

No comments:

Post a Comment