இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, May 23, 2013

97 அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் ஆங்கில வழி கல்வி

  திருப்பூர் மாவட்டத்தில் வரும் கல்வியாண்டில் 97 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசு வருகிற கல்வியாண்டில் அரசு தொடக்கப் பள்ளிகள் மற்று ம் நடுநிலைப் பள்ளிகளில் 1ம் வகுப்பில் ஆங்கில வழி கல்வி தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இரு ந்தது. இதைத்தொ டர்ந்து பள்ளி கல்வித்துறை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆங்கில வழி கல்வி தொடங்க வசதிகள் உள்ள பள்ளிகளை தேர்வு செய்து அனுப்புமாறு அறிவுறுத்தியது.

திருப்பூர் மாவட்டத்தில் 100 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்க வசதி இருப்பதாக கருதி தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 97 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொ டங்க பள்ளி கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இதன்படி திருப்பூர் கல்வி மாவட்டத்தில் அவி னாசி ஒன்றியத்தில் 19 பள்ளி கள், ஊத்துக்குளி ஒன்றியத்தில் 10, தாராபுரம் ஒன்றியத்தில் 5, வெள்ளகோவில் ஒன்றியத்தில் 6, காங்கயம் ஒன்றியத்தில் 4, திருப்பூர் தெற்கு ஒன்றியத்தில் ஒரு பள்ளி, திருப்பூர் வடக்கு ஒன்றியத்தில் 26,

பல்லடம் ஒன்றியத்தில் ஒரு பள்ளி, உடுமலை ஒன்றியத்தில் 9, பொங்கலூர் ஒன்றியத்தில் 3, மடத்துக்குளம் ஒன்றியத்தில் 6, குடிமங்கலம் ஒன்றியத்தில் 6, மூலனூர் ஒன்றியத்தில் ஒரு பள்ளி என்று மொ த்தம் 97 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் வருகிற கல்வியாண்டில் 1ம் வகுப்பில் ஆங்கில வழி கல்வி தொடங்க ஏற்பாடு ந¬ டபெற்று வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment