இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, January 09, 2013

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு ரூ.3000 பொங்கல் போனஸ்!

  தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3000 ரூபாய் பொங்கல் போனஸ்  வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"அரசுக்கும், மக்களுக்கும்  இடையே பாலமாக செயல்படுபவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று  சொன்னால் அது மிகையாகாது.

அரசின் நலத் திட்டங்களுக்கும், நாட்டின்  முன்னேற்றத்திற்கும் அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, 1. 2011-2012 ஆம் ஆண்டிற்கு, ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த அலுவலர்கள்  மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற உச்ச வரம்பிற்குட்பட்டு 30 நாட்கள்  ஊதியத்திற்கு இணையாக மிகை ஊதியம் வழங்கப்படும்.

  2. ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்,  நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து  சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும்  முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள்,  சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள்,  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி  பணியாளர்கள்,  கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்  துறையில் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து  உதவியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த  அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில்  பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப்  பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் சிறப்பு  போனஸ் வழங்கப்படும

். 3. உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில்  பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக் குழு /  அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு / இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்  ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின்  கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்தப் போனஸ் வழங்கப்படும். 

4. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக  அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு 500 ரூபாய் பொங்கல்  பரிசாக வழங்கப்படும். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவிற்கிணங்க அரசு  ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவதன் மூலம், அரசு  ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை  மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு 311 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்" என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment