இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, May 21, 2017

ஐடிஐ-க்களுக்கு பள்ளி அந்தஸ்து: மத்திய அரசு திட்டம்


தொழில் பயிற்சி நிலையங்களுக்கு (ஐடிஐ) உயர்நிலை மற்றும் மேநிலைப் பள்ளிகளுக்குரிய அந்தஸ்தை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

மாணவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் தொழில் பயிற்சிகளை ஐடிஐ-க்கள் அளித்து வருகின்றன. எனினும், அங்கு பயிற்சியை முடித்த மாணவர்கள், பள்ளிகளில் படிப்பை முடித்த மாணவர்களைப் போல கல்லூரிகளில் சேர முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில், ஐடிஐ-க்களுக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்குரிய அந்தஸ்தை அளிக்கலாம் என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் திறன் மேம்பாடு - தொழில் முனைவு நலத் துறை அமைச்சகம் பரிந்துரைத்தது.

அதனை ஏற்றுக்கொண்ட மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற ஒரு தனி வாரியத்தை, ஐடிஐ-க்களுக்காக அமைக்க முடிவு செய்துள்ளது. அவ்வாறு உருவாக்கப்படும் புதிய வாரியம், பள்ளிகளில் அரசுத் தேர்வுகள் நடத்தி வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு இணையாக, ஐடிஐ-க்களில் தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்கும். இந்தச் சான்றிதழ்களைப் பெற்ற மாணவர்கள், 10-ஆவது மற்றும் 12-ஆவது வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இணையாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர முடியும்.

அதற்காக, சிபிஎஸ்இ, பல்கலைக்கழக மானிய ஆணையம், மாநில கல்வி வாரியங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நாடெங்கிலும் உள்ள 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐடிஐ-க்களில் பயிலும் மாணவர்கள் பலனடைவார்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன

No comments:

Post a Comment