இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, May 20, 2017

சமூக பாதுகாப்பு துறையில் தொழில் பிரிவு பயிற்று ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


சமூக பாதுகாப்பு துறையின் தொழில் பிரிவு பயிற்று ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு அரசு சமூகப் பாதுகாப்பு துறை நிறுவனங்களில் காலியாக உள்ள தொழில் பிரிவு பயிற்று ஆசிரியர் பணியிடங்களை, இதே துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் கல்வி பயின்ற மற்றும் பயிலும் மாணவர்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளது.

தகுதியானவர்கள், www.socialdefence.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வி, வயது, தொழிற்கல்வி சான்று மற்றும், சமூக பாதுகாப்பு துறை நிறுவன முன்னாள் மாணவர் என்பதற்கான சான்று ஆகியவற்றின் நகல்களை இணைத்து, வரும் மே 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை ஆணையர், சமூக பாதுகாப்பு துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், சென்னை- 10 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044- 26426421 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம்'' என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment