இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, May 26, 2017

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 28-ம் தேதி வெளியீடு


நாடு முழுவதும் 10.98 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வை எழுதினர். கடினமான கேள்விகளுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கருணை மதிப்பெண்கள் கடந்த ஏப்ரல் மாதம் சிபிஎஸ்இ ரத்து செய்தது. இதனால் மாணவ மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிபிஎஸ்இ-யின் முடிவை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இத்தனை ஆண்டுகளாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கருணை மதிப்பெண்களை ரத்து செய்வது பொறுப்பற்ற, நியாயமற்ற செயலாகும். இந்த முடிவை நடப்பாண்டே அமல்படுத்தினால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே கருணை மதிப்பெண்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் சிபிஎஸ்இ கூறியிருப்பதாவது: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் 28-ம் தேதி வெளியிடப்படுகின்றன. cbse.nic.in என்ற இணையதளத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். டெல்லி ஐகோர்ட் உத்தரவை பின்பற்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment