இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, March 31, 2017

புதிய நிதியாண்டு


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு காலக்கெடு நிறைவு , பட்ஜெட்டில் வருமான வரி விகிதம், வங்கி வைப்புத்தொகையில் மாற்றம் மற்றும் பல்வேறு கட்டணங்கள், வரி விகிதங்களில் மாற்றத்துடன் புதிய நிதியாண்டு துவங்கியது.

அதன் விவரம் வருமாறு:

*கணக்கில் காட்டாத வருமானத்திற்கு இன்று முதல் வருமான வரி 77.2 சதவீதம் வரை வசூலிக்கப்படும்.

* ஆண்டு வருமானம் ரூ. 2..5 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சம் இருந்தால் வருமான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

*இன்று முதல் வாகன காப்பீட்டு பிரீமியம் தொகை 41 சதவீதம் உயர்கிறது.

* பி.பி.எப். உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி வகிதம் 0.1 சதவீதம் குறைக்கப்படுகிறது.

* பெருநகர எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் வைப்புத்தொகை ரூ.5000 வைத்திருக்க வேண்டும்.

* நகரவாழ் எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் வைப்புத்தொகை, ரூ.3000 வைத்திருக்க வேண்டும்.

* சிறுநகர எஸ்.பி.ஐ., வாடிக்கை வாடிக்கையாளர்கள் ரூ.2000 வைத்திருக்க வேண்டும்.

* கிராமப்பகுதி எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் வைப்பத்தொகை ரூ.1000 வைத்திருக்க வேண்டும்.
மேற்கண்ட வைப்பு தொகை குறைவாக இருந்தால் வாடிக்கையாளர்களிடம் அபராதம் விதிக்கப்படும்.

* காற்று மாசை குறைக்க பி.எஸ்., 4 வகை வாகனங்கள் விற்கும் உத்தரவு இன்று முதல் அமல்படுத்தப்படுள்ளது..

* தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 394 சுங்கச்சாவடிகளில் வாகன கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment