இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, March 30, 2017

பிளஸ் 2 தேர்வு இன்றுடன் முடிகிறது: 6ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தம்


கடந்த 2ம் தேதி ெதாடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்றுடன் முடிகிறது. வரும் 6ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகின்றன. கடந்த 2ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கின. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 6,737 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 837 பேர் மாணவியர். 4 லட்சத்து 17 ஆயிரத்து 994 பேர் மாணவர்கள். ஒரே ஒரு நபர் திருநங்கை. மாணவர்களை விட கூடுதலாக 62 ஆயிரத்து 843 மாணவியர் இந்த ஆண்டு தேர்வு எழுதியுள்ளனர்.

அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 5 லட்சத்து 97 ஆயிரத்து 738 பேரும், வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் 2 லட்சத்து 23 ஆயிரத்து 977 பேரும், கலைப் பிரிவு பாடத் தொகுதியின் கீழ் 13 ஆயிரத்து 354 பேரும் தேர்வு எழுதியுள்ளனர். மேற்கண்ட பள்ளி மாணவ, மாணவியரை தவிர தனித் தேர்வர்கள் 34 ஆயிரத்து 868 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களுக்காக, தமிழகம் முழுவதும் 2,434 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்றுடன் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவடைகின்றன. இறுதி நாளான இன்று உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. இதையடுத்து, வரும் 6ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 44 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளன.

No comments:

Post a Comment