இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, October 31, 2017

அரசு ஊழியருக்கு புதிய ஊதிய அறிவிப்பு: நவம்பர் 30 -இல்தான் அமல்


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், ஊதிய உயர்வானது நவம்பர் மாதத்தில் இருந்தே நடைமுறைக்கு வருகிறது. இதனால், உயர்த்தப்பட்ட மாத ஊதியத்தை நவம்பர் 30 -ஆம் தேதிதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெற முடியும். மேலும், அக்டோபர் மாதத்துக்கான நிலுவைத் தொகை, 20 நாள்களில் அளிக்கப்படும் என நிதித் துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைகளின்படி, ஒவ்வொரு ஊழியருக்கும் மாத ஊதியமானது உயர்த்தி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட ஊதியமானது, அக்டோபர் 30 -ஆம் தேதியே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். தமிழக அரசின் நிதித் துறையானது புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நவம்பர் இறுதியில் முழுமையாக... இந்த உத்தரவுப்படி, புதிய ஊதிய விகிதம், நவம்பர் மாத இறுதியில் இருந்து (நவ.30) நடைமுறைக்கு வரும்.

ஊதியம் வழங்குவதற்கான மின்னணு சம்பளப் பட்டியலானது, உயர்த்தப்பட்ட ஊதிய விகிதத்துக்கு தகுந்தாற்போன்று திருத்தம் செய்யப்பட வேண்டும். இதற்காக, தேசிய தகவலியல் மையம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்ததும், நவம்பர் 30 -இல் உயர்த்தப்பட்ட ஊதியம் அளிக்கப்படும். அக்டோபர் 30 -ஆம் தேதியன்று, பழைய ஊதியமே அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அக்டோபர் மாதத்துக்கான உயர்த்தப்பட்ட ஊதியமானது நிலுவைத் தொகையாக நவம்பர் 20 -ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment