இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, January 04, 2014

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் 'டேட்டா சென்டருக்கு' மாற்றம்

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கணக்கு நடைமுறைகள், மாநில கணக்காயரிடம் (அக்கவுண்ட் ஜெனரல்) இருந்து, 'டேட்டா சென்டருக்கு' மாற்றப்பட்டது. 1.4.2003க்குப் பிறகு தமிழக அரசு பணியில் சேர்ந்தவர்கள், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளனர். இந்த ஊழியர்களிடம் மாதந்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீதத் தொகைக்கு, கணக்கு எண் ஒதுக்கீடு செய்து, அதை மாநில கணக்காயரே இதுவரை பராமரித்து வந்தார். இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசு உத்தரவில், 31.12.2013 வரை ஊழியர்களுக்கு புதிய கணக்கு எண் கேட்டு, சம்பந்தப்பட்ட துறையின் அலுலவக அதிகாரிகள், மாநில கணக்காயருக்கு தகவல் அனுப்பினர்.

அதன்படி கணக்கு எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1.1.2014 முதல் அரசு கருவூல கணக்குத்துறை கமிஷனருக்கே அனுப்ப வேண்டும். இந்த அலுவலர்களின் கணக்குகளும் மாநில டேட்டா சென்டருக்கு மாற்றப்படும். 2013-சு 14ம் ஆண்டுக்கான பிடித்தம் செய்த தொகைக்கான 'ஸ்லிப்' டேட்டா சென்டரில் இருந்து அனுப்பப்படும்.இனி கணக்குத் தொடர்பான எந்தக் கடிதப் போக்குவரத்தும் (விடுபட்ட உறவுத்தொகை) 31.12.2013 வரை மாநில கணக்காயரிடமும், அதன்பிறகு உள்ளவை அந்தந்த துறைக்கும் அனுப்பப்படும்.

No comments:

Post a Comment