இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, January 14, 2014

25 ஆண்டுகள் பணி முடித்தால் ஊக்க விருது வழங்க வேண்டும TNPTF

் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு ஊக்க விருது வழங்க வேண்டும் என ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் நகரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாவட்ட செயற்குழுகூட்டம் மாவட்டதலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. வெண்ணந்தூர் வட்டார செயலாளர் ஜெகநாதன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுரளி, மாவட்ட செயலாளர் தங்கவேல், முன்னாள் பொதுச்செயலாளர் முருகசெல்வராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், உயர்கல்வி படிக்க முன்னேற்பு ஆணை கிடைக்க பெறாத ஆசிரியர்களுக்கு பின்னேற்பு ஆணைகள் வழங்க வேண்டும். 25 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊக்க விருது வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பொங்கல் பண்டிகைக்குள் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment