இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, January 01, 2014

கிறுக்கல் நோட்டுகளை வங்கிகள் ஏற்கும்: வதந்திகளை மறுத்து ஆர்.பி.ஐ., அறிவிப்பு

'ரூபாய் நோட்டுகளில், ஏதேனும் எழுதப்பட்டிருந்தாலோ அல்லது கிறுக்கியிருந்தாலோ, அந்த நோட்டுகள், ஜனவரி, 1ம் தேதி முதல் செல்லாது; அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளும் ஏற்காது' என, சில மாதங்களுக்கு முன், தவறான செய்தி, சிலரால் பரப்பப்பட்டது. இதையடுத்து, ஏராளமான பொதுமக்கள், புத்தாண்டிற்கு முன், தங்களிடம் இருந்த கிறுக்கல் ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து, புதிய நோட்டுகளை பெற்று வந்தனர். 'நீட் அண்டு கிளீன் பாலிசி': மக்களிடையே ஏற்பட்ட பீதியை தணிக்கும் விதத்தில், ரிசர்வ் வங்கி, நேற்று விளக்கம் அளித்துள்ளது. அறிக்கையில், ரிசர்வ் வங்கி தெரிவித்ததாவது:

ரூபாய் நோட்டுகளை சுத்தமாகவும், அழுக்குபடாமலும் பாதுகாக்க, கடந்த ஆகஸ்ட் மாதம், ஆர்.பி.ஐ., அனைத்து வங்கிகளுக்கும், 'நீட் அண்டு கிளீன் பாலிசி' சுற்றறிக்கை அனுப்பியது. அதில், வங்கி ஊழியர்களுக்கு சில குறிப்புகள் சொல்லப்பட்டிருந்தன. ரூபாய் நோட்டுகளை சுத்தமாக வைத்திருக்கவும், அசிங்கப்படுத்தாமலும் இருக்க, 'வாடிக்கையாளர்களை அதில் எவ்வித எழுத்துக்களையும் எழுத வேண்டாம்' என, அறிவுறுத்துமாறு ஆர்.பி.ஐ., கூறியிருந்தது. மேலும், சில வங்கி ஊழியர்களிடம், ரூபாய் நோட்டுகளில் எழுதும் பழக்கம் உள்ளது. அவர்களை இனி, அவ்வாறு எழுத வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டடனர். நம்ப வேண்டாம்: இந்த நடவடிக்கைகளின் மூலம், எதிர்காலத்தில் அழுக்கற்ற ரூபாய் நோட்டுகளை பராமரிக்க முடியும். எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகள், வங்கிகளில் வாங்கப்படாது என்ற வதந்தியை, பொதுமக்கள் நம்ப வேண்டாம். அனைத்து வங்கிகளும், அவ்வகை நோட்டுகளை பெற்றுக் கொள்ளும். இவ்வாறு, ஆர்.பி.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment