இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, September 13, 2012

அடுத்தாண்டு மே 5ல் மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வ

   "நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு, அடுத்த ஆண்டு மே 5ம் தேதி நடைபெறும்" என, மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) அறிவித்துள்ளது.

நாட்டில் மொத்தம், 355 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், பொது நுழைவுத் தேர்வுகளை நடத்தி வந்தன. இந்நிலையில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புக்களில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்த, மருத்துவக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

நாட்டில் முதல்முறையாக மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (என்.இ.இ.டி.,) என அழைக்கப்படும் இந்த தேர்வில், 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு தேதியை அறிவித்த சி.பி.எஸ்.இ., "நாட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான பொது நுழைவுத் தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்தும் என ஏற்கனவே, மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது.

இத்தேர்வு, ஆங்கிலம், இந்தி மற்றும் நுழைவுத் தேர்வை நடத்தும் மாநிலங்களின் மொழிகளில் நடத்தப்படும். இதற்கான பாடத் திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தது. அதேசமயம், மாநில அரசுகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் முடிவு செய்துள்ள இட ஒதுக்கீடு விவகாரங்களில் தலையிடப்பட மாட்டாது என, மருத்துவக் கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது.

No comments:

Post a Comment