இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, September 12, 2012

சமச்சீர் கல்வி முறையில் 2ம் பருவ பாட புத்தகம்: ஆர்வம் காட்டாத மெட்ரிக் பள்ளிகள்  

    சமச்சீர் கல்வி முறையில், இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்களை பெறுவதில், சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளன. தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையில், நடப்பு கல்வியாண்டு முப்பருவ பாடமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியரின் புத்தக சுமையை குறைக்கும் வகையில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையில், மூன்று பிரிவுகளாக பாடப்புத்தகம் பிரிக்கப்பட்டது. "இன்டன்ட்' இதன்படி, முதல் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இதில், ஒன்று அல்லது இரண்டு புத்தகத்தி லேயே தமிழ், ஆங்கிலம், கணிதம்,அறிவியல், சமூக அறிவியல் என, அனைத்து பாடங்களும் அச்சிடப்பட்டு இருந்தன. இம்மாதம், 30ம் தேதியுடன் முதல் பருவத்துக்கான காலம் முடிவடைவதால், அதற்கான தேர்வுகளும் நடந்து வருகின்றன. தேர்வு விடுமுறை முடிந்து, அக்., 1ம் தேதியிலிருந்து, இரண்டாம் பருவத்துக்கான பாடம் நடத்தப்பட உள்ளது.

இரண்டாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள், அக்டோபர் முதல் வாரத்துக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு பள்ளிக்கும் தேவைப்படும் புத்தகங்கள் எண்ணிக்கை குறித்த, "இன்டன்ட்' பெறப்பட்டு, இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் பெரும்பாலானவை, இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள் தேவை குறித்து, எதுவும் தெரிவிக்காமல் அலட்சியமாக உள்ளன.

இதனால், அப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அலட்சியம் : இதுகுறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது

: மண்டல பாட நூல் கழக குடோன் மூலம் பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பள்ளியும், தன் தேவைப்பட்டியலை வழங்கும் போது, அதற்கேற்ப முன் கூட்டியே தயார் செய்து, சரியான நேரத்துக்குள் பாடப்புத்தகங்களை அனுப்பி வைக்க முடியும். பெரும்பாலான மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள், தங்களுக்கு தேவையான புத்தகங்கள் குறித்து எவ்வித தகவலும் தராமல், அலட்சியப்போக்குடன் உள்ளனர். அக்டோபர் மாதத்தில், ஒரே சமயத்தில், அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் வரும் போது, ஒரு சில பாடப் புத்தகங்கள் பற்றாக்குறை ஏற்பட்டாலும், அவற்றை தருவித்து தர, ஒரு சில நாள் தாமதமாகலாம். இதனால், அப்பள்ளிகளுக்கு அலைச்சலும், மாணவர்களுக்கு தாமதமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதை தவிர்க்க, சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முன்கூட்டியே புத்தகங்களை பெறுவதற்கான நடவடிக்கை எடுப்பது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment