இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, September 19, 2012

பிளஸ் 2 தனித்தேர்வு "தட்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம்

  பிளஸ் 2 தனித்தேர்வர்கள் "தட்கல்' திட்டத்தின் கீழ் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

 இது குறித்து அந்த இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  

அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) இணையதளத்தில் (www.dge.tn.nic.in)  விண்ணப்பிக்கலாம்.  செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம். செப்டம்பர் 22-ம் தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு விண்ணப்பிக்க முடியாது.

"தட்கல்' முறையில் விண்ணப்பிக்கும் மாணவர்கள், ரூ. 1,000 கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும்.  பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து அனுமதிச் சீட்டை பெறலாம். இதில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். மதிப்பெண் சான்றிதழ் அனுப்புவதற்கு ரூ. 30-க்கான தபால் தலை ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உறையைச் சமர்ப்பிக்கவேண்டும்.

No comments:

Post a Comment