இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, February 17, 2017

துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிக்கு நாளை குரூப் 1 தேர்வு: செல்போன், கால்குலேட்டருக்கு தடை


துணைக் கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 தேர்வு நாளை நடக்கிறது.தமிழக அரசு பணியில் காலியாக உள்ள துணை கலெக்டர்-29 இடங்கள், போலீஸ் டிஎஸ்பி- 34, வணிவரித்துறை உதவி ஆணையர்- 8, மாவட்ட பதிவாளர்-1, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்- 5, மாவட்ட தீயணைப்பு அலுவலர்- 8 ஆகிய குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 85 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை நடக்கிறது.

அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு மையத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக வர வேண்டும். தேர்வுக்கூடத்துக்கு செல்வோர் கால்குலேட்டர், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.தேர்வு மையத்தை கண்காணிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வு முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக பிரதான தேர்வுக்கு அழைக்கப்படுவார். அதில் தேர்ச்சி பெறுவோர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு கட் ஆப் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் பணிகள் ஓதுக்கீடு செய்யப்படும்.

No comments:

Post a Comment